01-26-2006, 08:35 PM
<b>அரசாங்கத்தில் இணைந்த இரு அமைச்சர்கள் மீது நடவடிக்கை: ஐ.தே.க. முடிவு </b>
சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்த இரு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஓழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி முடிவு செய்துள்ளது.
அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவுசெய்துள்ளது.
கட்சி யாப்பின் 3 வது மற்றும் 4வது பிரிவிற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் செயற்குழுவைக் கேட்காது அரசாங்கத்தினதோ வேறு கட்சியினதோ பொறுப்பினை ஏற்பது சட்டவிரோதமானது என்றும் அதனால் அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப்பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கட்சி செயற்குழுவின் அனுமதியைப் பெறாது அரசாங்கப் பதவியை வகிப்பதனூடாக கட்சி அங்கத்துவம் தானாகவே இரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்த இரு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஓழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி முடிவு செய்துள்ளது.
அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவுசெய்துள்ளது.
கட்சி யாப்பின் 3 வது மற்றும் 4வது பிரிவிற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் செயற்குழுவைக் கேட்காது அரசாங்கத்தினதோ வேறு கட்சியினதோ பொறுப்பினை ஏற்பது சட்டவிரோதமானது என்றும் அதனால் அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப்பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கட்சி செயற்குழுவின் அனுமதியைப் பெறாது அரசாங்கப் பதவியை வகிப்பதனூடாக கட்சி அங்கத்துவம் தானாகவே இரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

