01-26-2006, 08:05 PM
[size=18]<b>தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்: சிங்களப் படைகளுக்கு உயர்கல்வி மாணவர்கள் எச்சரிக்கை!</b>
தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று சிங்களப் படைகளுக்கு யாழ். உயர்கல்வி மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
வடக்கு, கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவமும் அதனோடு இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்டு வரும் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்று சிங்களக் ஆட்சிப் பீடம் கூறிக்கொண்டிருக்க மறுபுறம் சிங்கள இராணுவமும் அதன் ஒட்டுக்குழுக்களும் படுகொலைகளை மேற்கொண்டு வருவதிலிருந்து சிங்களப் பேரினவாதத்தின் உண்மைப் போக்கினை அறிந்து கொள்ள முடிகின்றது.
எமது அப்பாவி மக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் எனப் படுகொலை பட்டியல்கள் நீண்ட வண்ணம் உள்ளது. இத்தகைய இராணுவ அராஜகத்தால் மக்கள் பயப் பீதியுடன் வாழ்கின்றனர். எனவே இந்தக் கொலைகளை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் இப் படுகொலைகளை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
நாளுக்கு நாள் எமது உறவுகளை நாம் இழந்து கொண்டிருக்க முடியாது. வரணியில் சுட்டிபுரத்தில் எமது மாணவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்தோடு திருமலையில் சுடரொளி செய்தியாளரும் மூதூரில் குடும்பஸ்தர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே இத்தகைய இராணுவ காடைத்தனங்களானது தென்னிலங்கை பேரினவாதிகளின் ஆயுதமுனையினால் தமிழ் மக்களை அடக்குவதற்கான கபட நோக்கத்தையே புலப்படுத்தி நிற்கின்றது.
சிங்கள இராணுவத்தின் ஆயுதப் படுகொலை கலாச்சாரம் வளர்கின்ற போது எவ்வாறு பேச்சுக்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பது? எவ்வாறு பேச்சுக்கள் சாத்தியமாகும்?
இதுவே இன்றைய எமது மக்களின் மனங்களில் எழுந்து நிற்கின்ற விடை காணமுடியாத வினாவாகும்.
எனவே இத்தகைய படுகொலைகளை உயர்கல்வி மாணவர்கள் ஆகிய நாம் கண்டிக்கின்றோம். தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று சிங்கள ஆட்சியர்களுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் எச்சரிக்கை விடுகின்றோம்.
பல்வேறு உரிமைகளை பற்றிக் கதைக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும், சிறிலங்கா இராணுவத்தினது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்?
ஒரு தலைப்பட்சமாக கண்டிக்க முற்படும் அமெரிக்காவுக்கு இப்படுகொலை அராஜகம் கண்களுக்கு புலப்படவில்லையா?
சர்வதேச சமூகம் விழித்தெழுந்து சிங்கள பேரினவாதப் போக்கினை நிறுத்தி தமிழர்களுக்கான நிரந்தர நியாயமான தீர்வினை எட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும்.
இல்லையேல் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமையை கையில் எடுப்பார்கள் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று சிங்களப் படைகளுக்கு யாழ். உயர்கல்வி மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
வடக்கு, கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவமும் அதனோடு இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்டு வரும் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்று சிங்களக் ஆட்சிப் பீடம் கூறிக்கொண்டிருக்க மறுபுறம் சிங்கள இராணுவமும் அதன் ஒட்டுக்குழுக்களும் படுகொலைகளை மேற்கொண்டு வருவதிலிருந்து சிங்களப் பேரினவாதத்தின் உண்மைப் போக்கினை அறிந்து கொள்ள முடிகின்றது.
எமது அப்பாவி மக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் எனப் படுகொலை பட்டியல்கள் நீண்ட வண்ணம் உள்ளது. இத்தகைய இராணுவ அராஜகத்தால் மக்கள் பயப் பீதியுடன் வாழ்கின்றனர். எனவே இந்தக் கொலைகளை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் இப் படுகொலைகளை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
நாளுக்கு நாள் எமது உறவுகளை நாம் இழந்து கொண்டிருக்க முடியாது. வரணியில் சுட்டிபுரத்தில் எமது மாணவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்தோடு திருமலையில் சுடரொளி செய்தியாளரும் மூதூரில் குடும்பஸ்தர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே இத்தகைய இராணுவ காடைத்தனங்களானது தென்னிலங்கை பேரினவாதிகளின் ஆயுதமுனையினால் தமிழ் மக்களை அடக்குவதற்கான கபட நோக்கத்தையே புலப்படுத்தி நிற்கின்றது.
சிங்கள இராணுவத்தின் ஆயுதப் படுகொலை கலாச்சாரம் வளர்கின்ற போது எவ்வாறு பேச்சுக்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பது? எவ்வாறு பேச்சுக்கள் சாத்தியமாகும்?
இதுவே இன்றைய எமது மக்களின் மனங்களில் எழுந்து நிற்கின்ற விடை காணமுடியாத வினாவாகும்.
எனவே இத்தகைய படுகொலைகளை உயர்கல்வி மாணவர்கள் ஆகிய நாம் கண்டிக்கின்றோம். தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று சிங்கள ஆட்சியர்களுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் எச்சரிக்கை விடுகின்றோம்.
பல்வேறு உரிமைகளை பற்றிக் கதைக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும், சிறிலங்கா இராணுவத்தினது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்?
ஒரு தலைப்பட்சமாக கண்டிக்க முற்படும் அமெரிக்காவுக்கு இப்படுகொலை அராஜகம் கண்களுக்கு புலப்படவில்லையா?
சர்வதேச சமூகம் விழித்தெழுந்து சிங்கள பேரினவாதப் போக்கினை நிறுத்தி தமிழர்களுக்கான நிரந்தர நியாயமான தீர்வினை எட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும்.
இல்லையேல் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமையை கையில் எடுப்பார்கள் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

