01-26-2006, 08:02 PM
<b>யாழில் எப்போது முடிவுக்கு வரும் இராணுவ நெருக்குவாரங்கள்? </b>
[வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 18:38 ஈழம்] [தாயக செய்தியாளர்]
சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன.
யாழ்ப்பாண நிலைமையை விவரிக்கும் செய்திகளின் தொகுப்பு:
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் படையினரும் படைப் புலனாய்வாளர்களும் நடமாடுவதால் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மருத்துவமனையின் 24, 27 இலக்கங்களைக் கொண்ட விடுதிகள் படையினரால் கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவமனைக்குள்ளும், வாகன தரிப்பிடப் பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் ஆறு பேர் வரையிலானோர் ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மறைத்து வைத்த நிலையில் மருத்துவமனைக்கு வந்து செல்வோரை கண்காணிப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- அரியாலை கிழக்கில் உள்ள கடலோரக் காவலரண்களை பலப்படுத்த கோயிலாக்கண்டி தனங்கிளப்பு பகுதிகளில் இருந்து இரவு பகலாக பெருமளவான பனை மரங்கள் உழவு இயந்திரங்களிலும் கனரக வாகனங்களிலும் படையினரால் தறித்து எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மரங்களை வீதியோரப் படையினரின் பாதுகாப்புடன் பிரதான பாதை வழியாக அரியாலைக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கும் மக்கள், கச்சாய் தொடக்கம் கோயிலாக்கண்டி, அரியாலை, கொழும்புத்துறை வரையிலான கடற்கரைப்பகுதிகளில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
- யாழ். குடாநாட்டிலிருந்து படையினரின் அச்சுறுத்தலால் வெளியேறி வன்னிக்கு வரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் படையினரது சுவரொட்டிகள் முகமாலை இராணுவ சோதனைச் சாவடியில் ஒட்டப்பட்டு உள்ளன.
அச்சுவரொட்டியில் மக்களை அச்சுறுத்தும் கடுமையான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் 'இச்சுவரொட்டிகளை படித்து விட்டு வன்னிக்குச் செல்' என பொதுமக்களை படையினர் நிர்பந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
- யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பேரூந்து நிலையப் பகுதிகளில் இரண்டிற்கு மேற்பட்டோர் கூடி நிற்பதையோ, கூட்டமாக நடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று சிறிலங்கா படையினர் எச்சரித்துள்ளனர்.
- சிறிலங்கா படையினரின் வாகனங்கள் வருகின்ற பொழுது மக்கள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை அந்த இடத்திலேயே நிறுத்தித் தமது வாகனங்கள் சென்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் படையினரின் வாகனங்களுக்கு அருகருகே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று படையினர் எச்சரித்துள்ளனர்.
படையினர் பல புதிய புதிய நடைமுறைகளை ஏற்படுத்தி வருவதாகவும் இந்நடைமுறைகளால் யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- யாழ். குடாநாட்டில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புக்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களால் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் தற்பொழுது ஏற்பட்டுள்ள இராணுவ நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ். குடாநாட்டில் நாளாந்தம் தொடர்கின்ற அச்சம் கலந்த சூழ்நிலைகளால் வீடுகள் கட்டும் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் தொடர்வதாகவும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், இப்பகுதிகளுக்குச் சென்று வரக்கூடிய நிலை தற்பொழுது தொடர்கின்ற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
[வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 18:38 ஈழம்] [தாயக செய்தியாளர்]
சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன.
யாழ்ப்பாண நிலைமையை விவரிக்கும் செய்திகளின் தொகுப்பு:
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் படையினரும் படைப் புலனாய்வாளர்களும் நடமாடுவதால் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மருத்துவமனையின் 24, 27 இலக்கங்களைக் கொண்ட விடுதிகள் படையினரால் கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவமனைக்குள்ளும், வாகன தரிப்பிடப் பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் ஆறு பேர் வரையிலானோர் ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மறைத்து வைத்த நிலையில் மருத்துவமனைக்கு வந்து செல்வோரை கண்காணிப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- அரியாலை கிழக்கில் உள்ள கடலோரக் காவலரண்களை பலப்படுத்த கோயிலாக்கண்டி தனங்கிளப்பு பகுதிகளில் இருந்து இரவு பகலாக பெருமளவான பனை மரங்கள் உழவு இயந்திரங்களிலும் கனரக வாகனங்களிலும் படையினரால் தறித்து எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மரங்களை வீதியோரப் படையினரின் பாதுகாப்புடன் பிரதான பாதை வழியாக அரியாலைக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கும் மக்கள், கச்சாய் தொடக்கம் கோயிலாக்கண்டி, அரியாலை, கொழும்புத்துறை வரையிலான கடற்கரைப்பகுதிகளில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
- யாழ். குடாநாட்டிலிருந்து படையினரின் அச்சுறுத்தலால் வெளியேறி வன்னிக்கு வரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் படையினரது சுவரொட்டிகள் முகமாலை இராணுவ சோதனைச் சாவடியில் ஒட்டப்பட்டு உள்ளன.
அச்சுவரொட்டியில் மக்களை அச்சுறுத்தும் கடுமையான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் 'இச்சுவரொட்டிகளை படித்து விட்டு வன்னிக்குச் செல்' என பொதுமக்களை படையினர் நிர்பந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
- யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பேரூந்து நிலையப் பகுதிகளில் இரண்டிற்கு மேற்பட்டோர் கூடி நிற்பதையோ, கூட்டமாக நடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று சிறிலங்கா படையினர் எச்சரித்துள்ளனர்.
- சிறிலங்கா படையினரின் வாகனங்கள் வருகின்ற பொழுது மக்கள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை அந்த இடத்திலேயே நிறுத்தித் தமது வாகனங்கள் சென்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் படையினரின் வாகனங்களுக்கு அருகருகே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று படையினர் எச்சரித்துள்ளனர்.
படையினர் பல புதிய புதிய நடைமுறைகளை ஏற்படுத்தி வருவதாகவும் இந்நடைமுறைகளால் யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- யாழ். குடாநாட்டில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புக்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களால் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் தற்பொழுது ஏற்பட்டுள்ள இராணுவ நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ். குடாநாட்டில் நாளாந்தம் தொடர்கின்ற அச்சம் கலந்த சூழ்நிலைகளால் வீடுகள் கட்டும் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் தொடர்வதாகவும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், இப்பகுதிகளுக்குச் சென்று வரக்கூடிய நிலை தற்பொழுது தொடர்கின்ற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

