Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்காவின் அரசியலில் நடந்தேறும் கட்சித்தாவல்கள்
#3
<b>ஐ.தே.க.வினரை இணைத்தால் அரசாங்கத்துடனான நல்லுறவு பாதிக்கும்: கரு ஜயசூர்ய எச்சரிக்கை </b>
[<i>புதன்கிழமை, 25 சனவரி 2006</i>

ஐக்கிய தேசியக் கட்சியினரை சிறிலங்கா அரசாங்கத்தில் இணைத்தால் அரசாங்கத்துடனான நல்லுறவு பாதிக்கும் என்று அக்கட்சியின் பிரதிச் செயலாளர் கரு ஜயசூர்ய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளதாவது:

சமாதான செயற்பாடுகள் உட்பட அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசியல் ரீதியாக உடன்பாட்டை எட்டி செயற்படுவதாயின் அரசாங்கம் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான்.

அதைவிடுத்து கட்சியின் உறுப்பினர்களுடன் செயற்பாடுகளை மேற்கொள்வதானது வெற்றியளிக்காது.

சமாதான செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கட்சி என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதைக் காண்பதற்கே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது.

குறுகிய அரசியல் இலாபங்களைத் தவிர்த்து கட்சியுடனே அரசாங்கம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கம் பக்கம் இழுத்துக் கொள்வதனூடாக இத்தகைய நல்லுறவை ஏற்படுத்த முடியாது என்றார் கரு ஜயசூர்ய.

தகவல் மூலம்-புதினம்.கொம்
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:49 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:50 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:35 PM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:46 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:47 AM
[No subject] - by தூயவன் - 01-29-2006, 08:48 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 10:59 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:47 AM
[No subject] - by MUGATHTHAR - 02-01-2006, 10:58 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 08:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)