01-26-2006, 02:49 AM
<b>ஐ.தே.க.வின் 7 மாவட்டத் தலைவர்கள், 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கம் தாவுகின்றனர்! </b>
ஐக்கிய தேசியக் கட்சியின் 7 மாவட்டத் தலைவர்கள் மற்றும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் அரச பக்கம் தாவக்கூடும் என்று தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய எதிர்க்கட்சி என்ற தகுதியை இழப்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியையும் ரணில் விக்கிரமசிங்க இழக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேகலிய ரம்புக்வெல, மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க ஆகியோர் திட்டமிடல் மற்றும் இயற்கைப் பேரழிவு மேலாண்மை அமைச்சர்களாக நேற்றுப் பொறுப்பேற்றனர்.
மேலும் 5 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைவது உறுதிப்படுத்தப்பட்டு நிலையில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைய உள்ளனர் என்று நேற்று இரவு கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மகிந்தவை ஆதரிப்பதற்காக தாம் அரசாங்கத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றதாக அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்குத் தாவுவோர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.தே.கவின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த ரம்புக்வெல, அவர் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.
கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி மற்றொரு தனிக் கட்சியைத்தான் துவக்கினார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அரச தலைவர் செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த மகிந்த சமரசிங்க, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>[/i]
ஐக்கிய தேசியக் கட்சியின் 7 மாவட்டத் தலைவர்கள் மற்றும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் அரச பக்கம் தாவக்கூடும் என்று தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய எதிர்க்கட்சி என்ற தகுதியை இழப்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியையும் ரணில் விக்கிரமசிங்க இழக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேகலிய ரம்புக்வெல, மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க ஆகியோர் திட்டமிடல் மற்றும் இயற்கைப் பேரழிவு மேலாண்மை அமைச்சர்களாக நேற்றுப் பொறுப்பேற்றனர்.
மேலும் 5 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைவது உறுதிப்படுத்தப்பட்டு நிலையில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைய உள்ளனர் என்று நேற்று இரவு கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மகிந்தவை ஆதரிப்பதற்காக தாம் அரசாங்கத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றதாக அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்குத் தாவுவோர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.தே.கவின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த ரம்புக்வெல, அவர் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.
கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி மற்றொரு தனிக் கட்சியைத்தான் துவக்கினார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அரச தலைவர் செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த மகிந்த சமரசிங்க, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>[/i]
"
"
"

