01-26-2006, 02:46 AM
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்!
[<i>புதன்கிழமை, 25 சனவரி 2006,</i>
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர்.
இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் ஒருமணியளவில் அவர் பதவி ஏற்றார்.
வெளிவிவிவகாரத் துறை உதவி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பொறுப்பேற்கக் கூடும் என்று தெரிகிறது. சுசாதந்த புஞ்சிநிலமஇ துறை ஒதுக்கீடு இல்லாத அமைச்சராககக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நவீன் திசநாயக்கவும் அரசாங்கம் பக்கம் தாவக் கூடும் என்று கூறப்படுகிறது.
13 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த போதும் அக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து நீடிக்க முடிவு செய்ததையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
[<i>புதன்கிழமை, 25 சனவரி 2006,</i>
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர்.
இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் ஒருமணியளவில் அவர் பதவி ஏற்றார்.
வெளிவிவிவகாரத் துறை உதவி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பொறுப்பேற்கக் கூடும் என்று தெரிகிறது. சுசாதந்த புஞ்சிநிலமஇ துறை ஒதுக்கீடு இல்லாத அமைச்சராககக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நவீன் திசநாயக்கவும் அரசாங்கம் பக்கம் தாவக் கூடும் என்று கூறப்படுகிறது.
13 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த போதும் அக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து நீடிக்க முடிவு செய்ததையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

