01-25-2006, 10:25 AM
<b>ஜெனிவாவில் பேச்சு நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் - அன்ரன் பாலசிங்கம் </b>
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் - ஸ்ரீலங்கா அரசிற்குமிடையிலான பேச்சு வார்த்தைகளை சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, இன்று தேசியத் தலைவர் அவர்களிற்கும் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்தமாத நடுப்பகுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும், இந்த பேச்சுக்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாத்திரமே அமையும் எனத் தெரிவித்துள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மக்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்ட பின்னரே ஏனைய விடயங்கள் தொடர்பான பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்....
தகவல் மூலம்- சங்கதி
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் - ஸ்ரீலங்கா அரசிற்குமிடையிலான பேச்சு வார்த்தைகளை சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, இன்று தேசியத் தலைவர் அவர்களிற்கும் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்தமாத நடுப்பகுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும், இந்த பேச்சுக்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாத்திரமே அமையும் எனத் தெரிவித்துள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மக்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்ட பின்னரே ஏனைய விடயங்கள் தொடர்பான பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்....
தகவல் மூலம்- சங்கதி
"
"
"

