01-25-2006, 09:44 AM
கருணாநிதி மீது விஜயகாந்த் தாக்கு
அடுத்தவர்களின் சொத்துக்களை அப்புறப்படுத்துதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். பேரன் சொத்துக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி யார் யாரையோ பார்க்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார் தேசிய ¬முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் விஜயகாந்த், காரைக்குடியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமு¬க தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.
விஜயகாந்த் பேசுகையில், நான் சிரமப்பட்டு, உழைத்து சம்பாதித்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டினேன். அதை இடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அது தொடர்பான உத்தரவு கூட எனக்கு இன்னும் வரவில்லை. கல்யாண மண்டபத்தை இடிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
ஆனால், இன்று சிலர், தனது பேரன் சொத்துக்குப் பிரச்சினை என்றவுடன் பதை பதைத்து, பதட்டமடைந்து, ஓடோடி யார் யாரையோப் பார்க்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அந்த மக்களுக்காக, அவர்களது பிரச்சினைகளுக்காக சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
ஆனால் அந்தக் கடமையிலிருந்து சிலர் தவறி விடுகிறார்கள். கடமையை மறந்து அடிக்கடி ஓடிப் போய் விடுகிறார்கள். இது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஆட்சியில் இருந்தால் மட்டும் தான் சபையில் இருப்போம். இல்லையேல் சபைக்கே செல்ல மாட்டோம் என்பது எந்த ஊர் நியாயம்?
இன்னும் சிலர் இருக்கிறார்கள். தங்களது தேவைக்கு மட்டும் சாதியைப் பயன்படுத்துகிறார்கள். சாதிப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றனர். மக்கள் இவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும். ஜாதி மதங்களுக்கு அடி பணிந்து விடாதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.
இன்று உள்ள சில கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன், ஏன் சவாலே விடுகிறேன். எங்களைப் போல நீங்களும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கத் தயாரா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? தைரியம் இருந்தால் நின்று பாருங்கள், பார்ப்போம்.
மக்களே கடந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். அதை நினைத்து, கடந்த கால ஆட்சிகளை மனதில் வைத்து இந்த ¬முறை ஓட்டுப் போடுங்கள். லஞ்ச லாவண்யமற்ற அரசு உருவாக வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
தட்ஸ் தமிழ்
அடுத்தவர்களின் சொத்துக்களை அப்புறப்படுத்துதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். பேரன் சொத்துக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி யார் யாரையோ பார்க்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார் தேசிய ¬முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் விஜயகாந்த், காரைக்குடியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமு¬க தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.
விஜயகாந்த் பேசுகையில், நான் சிரமப்பட்டு, உழைத்து சம்பாதித்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டினேன். அதை இடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அது தொடர்பான உத்தரவு கூட எனக்கு இன்னும் வரவில்லை. கல்யாண மண்டபத்தை இடிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
ஆனால், இன்று சிலர், தனது பேரன் சொத்துக்குப் பிரச்சினை என்றவுடன் பதை பதைத்து, பதட்டமடைந்து, ஓடோடி யார் யாரையோப் பார்க்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அந்த மக்களுக்காக, அவர்களது பிரச்சினைகளுக்காக சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
ஆனால் அந்தக் கடமையிலிருந்து சிலர் தவறி விடுகிறார்கள். கடமையை மறந்து அடிக்கடி ஓடிப் போய் விடுகிறார்கள். இது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஆட்சியில் இருந்தால் மட்டும் தான் சபையில் இருப்போம். இல்லையேல் சபைக்கே செல்ல மாட்டோம் என்பது எந்த ஊர் நியாயம்?
இன்னும் சிலர் இருக்கிறார்கள். தங்களது தேவைக்கு மட்டும் சாதியைப் பயன்படுத்துகிறார்கள். சாதிப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றனர். மக்கள் இவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும். ஜாதி மதங்களுக்கு அடி பணிந்து விடாதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.
இன்று உள்ள சில கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன், ஏன் சவாலே விடுகிறேன். எங்களைப் போல நீங்களும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கத் தயாரா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? தைரியம் இருந்தால் நின்று பாருங்கள், பார்ப்போம்.
மக்களே கடந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். அதை நினைத்து, கடந்த கால ஆட்சிகளை மனதில் வைத்து இந்த ¬முறை ஓட்டுப் போடுங்கள். லஞ்ச லாவண்யமற்ற அரசு உருவாக வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

