01-25-2006, 08:08 AM
<b>கிளிநொச்சியில் எரிக்சொல்ஹெய்ம் </b>
[புதன்கிழமை, 25 சனவரி 2006, 12:22 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்காக நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இன்று புதன்கிழமை காலை கிளிநொச்சி வருகை தந்துள்ளார்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்தி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி சந்திரன் விளையாட்டரங்கை எரிக் சொல்ஹெய்ம் வந்தடைந்தார்.
எரிக் சொல்ஹெய்முடன் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரும் கிளிநொச்சி வருகை தந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் எரிக் சொல்ஹெய்மை வரவேற்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ வன்முறைகள் மற்றும் அட்டூழியங்கள், இந்த வன்முறைகளுக்கான மக்களின் எதிர்வினை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை சிறிலங்கா அரசாங்கம் 4 ஆண்டுகளாக செயற்படுத்தாமல் இருப்பது, சீர்குலைவில் இருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுகளை நடத்துகிற இடம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
[புதன்கிழமை, 25 சனவரி 2006, 12:22 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்காக நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இன்று புதன்கிழமை காலை கிளிநொச்சி வருகை தந்துள்ளார்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்தி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி சந்திரன் விளையாட்டரங்கை எரிக் சொல்ஹெய்ம் வந்தடைந்தார்.
எரிக் சொல்ஹெய்முடன் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரும் கிளிநொச்சி வருகை தந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் எரிக் சொல்ஹெய்மை வரவேற்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ வன்முறைகள் மற்றும் அட்டூழியங்கள், இந்த வன்முறைகளுக்கான மக்களின் எதிர்வினை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை சிறிலங்கா அரசாங்கம் 4 ஆண்டுகளாக செயற்படுத்தாமல் இருப்பது, சீர்குலைவில் இருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுகளை நடத்துகிற இடம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
"

