Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணைத் தற்கொலை..!
#2
ம்ம்...ரொம்ப பரிதாபமாக இருக்கின்றது.

அப்படியான நோய்கள் ஐரோப்பாவில் அதுவும் நான் வசிக்கும் நாட்டிலும் இருக்கின்றது. நேரில் கூட அவர்களோடு வேலை செய்திருக்கின்றேன்.. அவர்கள் தானாக இயல்பாக நடக்கவே கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு left.. right சொல்லித்தான் நடக்க வைப்பார்கள்..நடக்கும் போது யாராவது குறுக்கால் சென்றாலோ..கதை கேட்டாலோ..அப்படியே நின்று விடுவார்கள்..மீண்டும் நடக்க ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கணும். சாப்பிடுவது கூட..கஷ்டம் தான். ரொம்ப பாவமாக இருக்கும்.

ஆனால் இப்படி கருணை தற்கொலை கேட்டு செய்து கொண்டதாக நான் அறியவில்லை. ஒரு பக்கதிலிருந் து பார்த்தால்..(அவர்களை நேரில் கண்டால்)அது நியாயம் போலவே தோன்றும். ஆனால் மறு பக்கம்..சட்டம் வேறு சொல்கிறதே. :roll:


Quote:இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகம் தாக்கும் எனினும் இள வயதிலும் இதன் தாக்கம் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்..!

ம்ம் கூட வயது வந்தோர்க்கு தான் வரும் நோய். ஆனால் சிறு வயதிலேயே..சிறுவர்களுக்கு/இடை வயதுள்ளோருக்கு கூட வரும் நோய் epilepsy என்பார்கள். அந்த நோய் தொடர்ந்து மருந்துகள் பாவிக்காமல் தொடருமானால்..அதன் அற்றாக்குகளினால் ஒரு காலகட்டத்தின் பின் மூளை செல்கள் சேதமடைந்து..இந்த நோய் உருவாகும் சந்தர்ப்பமும் கூட இருக்குமாம். சிறுவர்களுக்கு இது கூட வருமென்றால்..அந்த நோயின் தாக்கத்தினால் வருமாம். ஆனால் இப்போது தான் மருந்துகள் நிறையவே இருகின்றன. அதையும் தாண்டி..சில நாட்களுக்கு முன்...பள்ளியில் நல்ல புள்ளிகள் பெற்றதால் தாய் ஒரு சிறுவனை (அவர் குழந்தையை) game விளையாட அனுமதித்தாராம். சிறுவன் 12 மணி நேரம் தொடர்ந்து விளையாடியதால்..கேமிலிருந்து வந்த நிற ஒளியினால்..அவருக்கு எபிலெப்சி அற்றாக் வந்து டாக்டர்களால் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக இறந்து போனாராம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Messages In This Thread
[No subject] - by ப்ரியசகி - 01-24-2006, 04:39 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 06:15 PM
[No subject] - by RaMa - 02-05-2006, 07:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)