01-24-2006, 04:27 PM
<b>யாழில் பாதுகாப்பு நிலைகளை முழு வீச்சில் பலப்படுத்துகிறது சிறிலங்கா இராணுவம்!</b>
யாழ்ப்பாணத்தில் தமது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்துவதில் சிறிலங்கா இராணுவத்தினரும் கடற்படையினரும் தற்போது முழு வீச்சுடன் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது.
தமது மினி முகாம்கள், காவலரண்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் புதிய பதுங்குகுழிகள், மேலதிக காவலரண்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண மாநகர எல்லையினையும், 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கடல்வழி தரையிறக்கம் நடந்த பகுதியான கிழக்கு அரியாலை முன்னரங்கப் பகுதிகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பலாலி பிரதான இராணுவத் தளத்திலிருந்து இந்தப் பகுதிக்குள் மேலதிகப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய பல மினி முகாம்களும் இப்பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன.
அதேபோல் மீன்பிடி இறங்குதுறைகளை பொதுமக்களும் கடற்றொழிலாளர்களும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா கடற்படையினர் முற்றாகத் தடைவிதித்துள்ளனர்.
குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் இரவு மீன்பிடிக்க முற்றாகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறிக்கட்டுவான் இறங்குதுறை, நெடுந்தீவில் மாவலித்துறை ஆகியவற்றையும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தரைவழித் தொடர்புகள் அற்ற தீவுப் பிரதேசங்களில் இந்த இறங்குதுறைகளே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர யாழ். போதனா மருத்துவமனைக்கு முன்னால் வீதிக்கு நடுவே உள்ள வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை நிறுத்த சிறிலங்கா படையினர் தடை விதித்துள்ளனர்.
வாகனங்களுக்குள் குண்டுகள் மறைத்து வைக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இப்பகுதியில் வாகனங்களை யாரும் நிறுத்தக்கூடாது என்றும் படையினர் தடைவிதித்துள்ளனர்.
அப்பகுதியில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி படையினரால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை பொதுமக்களின் உரிமைகளை பறிப்பதாக யாழ். நலன்புரிச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புன்னாலைக்கட்டுவன் அச்செழுவில் உள்ள சிறிலங்காப் படைகளின் புலனாய்வாளர்கள் முகாமில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் செய்யப்படுகின்றன.
இப்பிரதேச மக்கள் படையினரது கொலை அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலாலி வீதியூடாக பயணம் செய்யும் மக்கள், அரச உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் வழிமறிக்கப்பட்டு விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் படைப் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வாகனப் பதிவிலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
யாழ்ப்பாணத்தில் தமது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்துவதில் சிறிலங்கா இராணுவத்தினரும் கடற்படையினரும் தற்போது முழு வீச்சுடன் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது.
தமது மினி முகாம்கள், காவலரண்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் புதிய பதுங்குகுழிகள், மேலதிக காவலரண்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண மாநகர எல்லையினையும், 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கடல்வழி தரையிறக்கம் நடந்த பகுதியான கிழக்கு அரியாலை முன்னரங்கப் பகுதிகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பலாலி பிரதான இராணுவத் தளத்திலிருந்து இந்தப் பகுதிக்குள் மேலதிகப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய பல மினி முகாம்களும் இப்பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன.
அதேபோல் மீன்பிடி இறங்குதுறைகளை பொதுமக்களும் கடற்றொழிலாளர்களும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா கடற்படையினர் முற்றாகத் தடைவிதித்துள்ளனர்.
குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் இரவு மீன்பிடிக்க முற்றாகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறிக்கட்டுவான் இறங்குதுறை, நெடுந்தீவில் மாவலித்துறை ஆகியவற்றையும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தரைவழித் தொடர்புகள் அற்ற தீவுப் பிரதேசங்களில் இந்த இறங்குதுறைகளே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர யாழ். போதனா மருத்துவமனைக்கு முன்னால் வீதிக்கு நடுவே உள்ள வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை நிறுத்த சிறிலங்கா படையினர் தடை விதித்துள்ளனர்.
வாகனங்களுக்குள் குண்டுகள் மறைத்து வைக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இப்பகுதியில் வாகனங்களை யாரும் நிறுத்தக்கூடாது என்றும் படையினர் தடைவிதித்துள்ளனர்.
அப்பகுதியில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி படையினரால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை பொதுமக்களின் உரிமைகளை பறிப்பதாக யாழ். நலன்புரிச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புன்னாலைக்கட்டுவன் அச்செழுவில் உள்ள சிறிலங்காப் படைகளின் புலனாய்வாளர்கள் முகாமில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் செய்யப்படுகின்றன.
இப்பிரதேச மக்கள் படையினரது கொலை அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலாலி வீதியூடாக பயணம் செய்யும் மக்கள், அரச உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் வழிமறிக்கப்பட்டு விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் படைப் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வாகனப் பதிவிலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

