01-24-2006, 04:24 PM
<b>யாழில் மாவீரர் குடும்ப உறுப்பினர் சுட்டுக்கொலை </b>
யாழ்ப்பாணத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த கந்தசாமி வைகுந்தன் (வயது 23) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மீசாலையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வகுப்புக்குச் சென்று விட்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கந்தசாமி வைகுந்தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அவரைத் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வரணி சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் முன்பாக கந்தசாமி வைகுந்தனை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
வரணி யாக்கலை பகுதியில் கந்தசாமி வைகுந்தன் குடும்பத்தினர் வசித்து வந்தனர். கந்தசாமி வைகுந்தனின் சகோதரர் மாவீரராக வீரச்சாவடைந்தவர்.
சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைகளையடுத்து வன்னிப் பகுதிக்கு அண்மையில் அக் குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர். தனது கல்விச் செயற்பாட்டுக்காக வரணியிலே கந்தசாமி வைகுந்தன் தங்கியிருந்த நிலையில் இன்று அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
யாழ்ப்பாணத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த கந்தசாமி வைகுந்தன் (வயது 23) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மீசாலையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வகுப்புக்குச் சென்று விட்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கந்தசாமி வைகுந்தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அவரைத் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வரணி சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் முன்பாக கந்தசாமி வைகுந்தனை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
வரணி யாக்கலை பகுதியில் கந்தசாமி வைகுந்தன் குடும்பத்தினர் வசித்து வந்தனர். கந்தசாமி வைகுந்தனின் சகோதரர் மாவீரராக வீரச்சாவடைந்தவர்.
சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைகளையடுத்து வன்னிப் பகுதிக்கு அண்மையில் அக் குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர். தனது கல்விச் செயற்பாட்டுக்காக வரணியிலே கந்தசாமி வைகுந்தன் தங்கியிருந்த நிலையில் இன்று அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

