01-24-2006, 04:21 PM
<b>சுடரொளி ஊடகவியலாளர் படுகொலை: சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் </b>[/color
திருகோணமலையில் சுடரொளி ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் இன்று செவ்வாய்க்கிழமை காலை படுகொலை செய்யப்பட்டமை குறித்து நாம் மிகுந்த அதிர்ச்சியடைகிறோம்.
[color=red]தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். கடந்த 12 மாதங்களில் 4 முக்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரச படைகளினால் தமிழ் நாளிதழ்களின் அலுவலகங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் பல தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
குறிப்பாக சுடரொளி நாளிதழ் பல அச்சுறுதல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் சுடரொளி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவு அலுவலகம் மீது இரு கைக்குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து ஓகஸ்ட் 29 ஆம் நாளன்று அதன் அச்சகப் பிரிவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டேவிட் செல்வரத்தினம் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளின் உளவாளி என்று குற்றம்சாட்டி தென்னிலங்கையின் அரசாங்க ஆதரவுக் கட்சியினால் சுடரொளியின் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது திருகோணமலையில் சுடரொளியின் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 வயது மற்றும் 2 வயது குழந்தைகளின் தந்தை அவர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராஜனுக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
சட்டத்தின் கடமையாக இந்தப் படுகொலையை நடத்தியவர்களைக் கைது செய்ய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் ஊடகச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல்களை நிறுத்தி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டியது அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>
தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
திருகோணமலையில் சுடரொளி ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் இன்று செவ்வாய்க்கிழமை காலை படுகொலை செய்யப்பட்டமை குறித்து நாம் மிகுந்த அதிர்ச்சியடைகிறோம்.
[color=red]தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். கடந்த 12 மாதங்களில் 4 முக்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரச படைகளினால் தமிழ் நாளிதழ்களின் அலுவலகங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் பல தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
குறிப்பாக சுடரொளி நாளிதழ் பல அச்சுறுதல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் சுடரொளி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவு அலுவலகம் மீது இரு கைக்குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து ஓகஸ்ட் 29 ஆம் நாளன்று அதன் அச்சகப் பிரிவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டேவிட் செல்வரத்தினம் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளின் உளவாளி என்று குற்றம்சாட்டி தென்னிலங்கையின் அரசாங்க ஆதரவுக் கட்சியினால் சுடரொளியின் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது திருகோணமலையில் சுடரொளியின் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 வயது மற்றும் 2 வயது குழந்தைகளின் தந்தை அவர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராஜனுக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
சட்டத்தின் கடமையாக இந்தப் படுகொலையை நடத்தியவர்களைக் கைது செய்ய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் ஊடகச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல்களை நிறுத்தி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டியது அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>
தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

