01-23-2006, 05:06 AM
<b>பாலசிங்கம் தம்பதிகள் இன்று காலை கிளிநொச்சியை வந்தடைவர்</b>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 07:31 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான முக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனிலிருந்து புறப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இன்று காலை கிளிநொச்சியை சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கீத்ரூ விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட அன்டன் பாலசிங்கமும் அவரது பாரியார் அடேல் பாலசிங்கமும் இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவர்.
அங்கிருந்து கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலனுடன் சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்தியில் கிளிநொச்சிக்கு செல்வர் என்றும் காலை 9 மணியளவில் இவர்கள் கிளிநொச்சியை சென்றடைவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரவேற்று தலைவர் பிரபாகரனிடம் அழைத்துச் செல்வார் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.
மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படும் பிரபா-சொல்ஹெய்ம் சந்திப்பு குறித்து அன்டன் பாலசிங்கமும் தலைவர் பிரபாகரனும் இன்றும் நாளையும் மந்திராலோசனை நடத்துவர் என்றும் தெரியவருகிறது
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 07:31 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான முக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனிலிருந்து புறப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இன்று காலை கிளிநொச்சியை சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கீத்ரூ விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட அன்டன் பாலசிங்கமும் அவரது பாரியார் அடேல் பாலசிங்கமும் இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவர்.
அங்கிருந்து கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலனுடன் சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்தியில் கிளிநொச்சிக்கு செல்வர் என்றும் காலை 9 மணியளவில் இவர்கள் கிளிநொச்சியை சென்றடைவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரவேற்று தலைவர் பிரபாகரனிடம் அழைத்துச் செல்வார் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.
மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படும் பிரபா-சொல்ஹெய்ம் சந்திப்பு குறித்து அன்டன் பாலசிங்கமும் தலைவர் பிரபாகரனும் இன்றும் நாளையும் மந்திராலோசனை நடத்துவர் என்றும் தெரியவருகிறது
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

