Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி..பகுதி-8
#1
<b>[size=18]வசியக்காரி..பகுதி-8


காதல்விதை விசித்திரமானது
ஒரே ஒரு விதையே
இரண்டு இடங்களில்
முளைகொண்டுவிடுகிறது
பெண்மனதிலும்...
ஆண்மனதிலும்...!


ஒரு இரவில்
ஒரு நூற்றாண்டே கழிகிறது
ஒவ்வொரு காதலனுக்கும்..!


அறுவைசிகிச்சை பிரசவவேதனையுடனேயே
ஒவ்வொரு
காதல் கவிதையையும்
எழுதிமுடிக்கின்றான் கவிஞன்...!


நீ
எப்போது பிறந்தாய்...?
எங்கே பிறந்தாய்...?
நீ பிறந்த இடத்தில் இருந்தே
ஒரு கவிஞனும்
அவன் கவிதைகளும்
பிறந்து வந்திருக்கிறது..!


கவிதையும் காதலும்
சொல்லிக்கொண்டு வருவதில்லை
திடீரென்று...
சொல்லாமலே வருகிறது...!


ஒரு சிறிய கிராமத்துக்கு
நேற்று வரவேண்டிய புகைவண்டி
இன்று வருவதைப்போல்
தாமதமாகவே காதலை சொல்கிறாள்
ஒவ்வொரு பெண்ணும்...!


உணர்வுகள் மயங்கிப்போக
உயிர் போகும் மரண வேதனையிலேயே
ஒவ்வொரு
காதல் கடிதமும்
எழுதிமுடிக்கின்றார்கள்
காதலர்கள்..!


இன்னும்
ஒரு நாள்கூட
முழுமையாக உன்னோடு
வாழ்ந்து பார்கவில்லை
ஆனால்...
ஒருகோடி ஆண்டுகாலம்
வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்
கற்பனையில்...!


ஆடிப்பாடி வேலைசெய்தால்
அலுப்பிருக்காது என்கிறார்கள்
நான்
ஆடிப்பாடாமல் அலுப்பின்றி
வேலைசெய்கின்றேன்
உன் நினைவுகளைச் சுமந்துகொண்டே...!


என்
இதையத்தைக் கடத்திச்சென்ற
காதல் தீவீரவாதியே....
உன்னைத் தேடினேன்
தேடுகின்றேன்
தேடிக்கொண்டே இருப்பேன்
வீரப்பனைத்தேடும்
இந்திய இராணுவம்போல்...!


இன்னும்
சில யுகங்கள்தேவை
இதயத்தில் உண்டான
றணம் ஆற
இன்னும்
சில நூற்றாண்டுகள் தேவை
நெஞ்சில் உண்டாக
காதல் வலி மாற...!


அந்தச் சாலைமரங்களுக்கு
நினைவிருக்கும்
நீ என்னோடு
நடந்த நாட்களை...!


நீ விரும்பிய அனைத்தையும்
நானும் விரும்புகிறேன்
உன்னை நினைவுபடுத்தும்
அத்தனை பொருட்களிலும்
பத்திரமாக அல்ல...
பைத்தியமாக இருக்கிறேன்...!


உன்னைக் குழிப்பாட்ட
மேகம்
மழைநீரை அனுப்புகிறது
ஆனால்
நீ எனது
கண்ணீரைக் கேட்கிறாய்...!


உன்னைத் தாலாட்ட
தென்றல்
தாலாட்டுப் பாடுகிறது
ஆனால்
நீ எனது
அழுகுரலைக் கேட்கிறாய்...!


பச்சைக்குழந்தை
தாயைத்தேடி அழுவதுபோல்
பிஞ்சுக்காதலனாய்
நானும்
உன்னைத்தேடி அழுகின்றேன்
நீ
ஆசையாய் மார்போடணைக்கும்
சுகத்திற்காகவும்
அன்புமொழிபேசி
கலங்காதே என்று
கண்ணீரைத்துடைக்கும்
ஸ்பரிசத்திற்காகவும்...!

(இன்னும் வரும்..)


[b]த.சரீஷ்
19.01.2004 (பாரீஸ்)</b>
sharish
Reply


Messages In This Thread
வசியக்காரி..பகுதி-8 - by sharish - 01-19-2004, 08:49 AM
[No subject] - by Paranee - 01-19-2004, 01:16 PM
[No subject] - by Eelavan - 02-14-2004, 05:39 AM
[No subject] - by nalayiny - 02-14-2004, 04:54 PM
[No subject] - by Mathivathanan - 02-14-2004, 05:08 PM
[No subject] - by poorukki - 02-15-2004, 08:05 PM
[No subject] - by poorukki - 02-15-2004, 08:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)