01-22-2006, 03:37 PM
<b>நீதிமன்றக் கடமைகளை புறம் தள்ளியுள்ள அச்சுவேலிப் பொலிஸ்.</b>
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிசார் பொது மக்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புறம் தள்ளியுள்ளார்கள். தமக்குப் பாதுகாப்பு இல்லையெனக் கூறி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிலமையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அச்சுவேலிப் பொலிசார் நீதிமன்றக் கடமைகளுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளமையால் நீதிமன்றங்கள் செயல் இழுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
அச்சுவேலிப் பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் உள்ளதுடன் மேல் நீதிமன்றத்திலும் உள்ளன.
குறிப்பிட்ட வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்படகின்ற போதிலும் அச்சுவேலிப் பொலிசார் நீதிமன்றத்திற்கு சமூகம் கொடுக்காமையால் வழக்கை நடத்த முடியாத நிலமை காணப்படுகின்றது. வழக்காளிகள் எதிராளிகள் என பொது மக்கள் நீதிமன்றத்திற்கு சமூகம் கொடுக்கின்ற போதிலும் பொலிசார் வராமையால் பொது மக்கள் பாதிப்படைகின்றார்கள்.
அநியாயமாக பொது மக்கள் தொழிலை விட்டு வருவதுடன் சட்டத்தரனிகளுக்கு ஆயிரக் கணக்கில் பணத்தையும் அடிக்கடி கொடுக்க வேண்டிய அவல நிலமையும் காணப்படுகின்றது பொது மக்கள் விடயத்தில் பொலிசார் புறம் தள்ளி நடப்பதினால் பொது மக்கள் நீதிமன்ற செயல்பாட்டை புறம் தள்ளும் நிலமைக்கு செல்லக் கூடிய நிலமை உருவாகி வருவதாக நீதமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.
<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிசார் பொது மக்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புறம் தள்ளியுள்ளார்கள். தமக்குப் பாதுகாப்பு இல்லையெனக் கூறி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிலமையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அச்சுவேலிப் பொலிசார் நீதிமன்றக் கடமைகளுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளமையால் நீதிமன்றங்கள் செயல் இழுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
அச்சுவேலிப் பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் உள்ளதுடன் மேல் நீதிமன்றத்திலும் உள்ளன.
குறிப்பிட்ட வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்படகின்ற போதிலும் அச்சுவேலிப் பொலிசார் நீதிமன்றத்திற்கு சமூகம் கொடுக்காமையால் வழக்கை நடத்த முடியாத நிலமை காணப்படுகின்றது. வழக்காளிகள் எதிராளிகள் என பொது மக்கள் நீதிமன்றத்திற்கு சமூகம் கொடுக்கின்ற போதிலும் பொலிசார் வராமையால் பொது மக்கள் பாதிப்படைகின்றார்கள்.
அநியாயமாக பொது மக்கள் தொழிலை விட்டு வருவதுடன் சட்டத்தரனிகளுக்கு ஆயிரக் கணக்கில் பணத்தையும் அடிக்கடி கொடுக்க வேண்டிய அவல நிலமையும் காணப்படுகின்றது பொது மக்கள் விடயத்தில் பொலிசார் புறம் தள்ளி நடப்பதினால் பொது மக்கள் நீதிமன்ற செயல்பாட்டை புறம் தள்ளும் நிலமைக்கு செல்லக் கூடிய நிலமை உருவாகி வருவதாக நீதமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.
<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
"

