01-22-2006, 03:26 PM
<b>நான் மூச்சுவிடக் கூட கால அவகாசம் அளிக்கவில்லை: புலிகள் மீது மகிந்த பகிரங்கக் குற்றச்சாட்டு</b>
சிறிலங்கா அரச தலைவராகப் பதவியேற்ற உடனே தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள் என்றும் தாம் மூச்சுவிடக் கூட கால அவகாசம் அளிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மீது மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு நாளை வருகை தர உள்ள நிலையில் மகிந்தவின் இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அசோசியேட்டெட் பிறஸ் செய்தி ஸ்தாபனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள நேர்காணல்:
நாம் வலிமையான இராணுவத்தைப் பெற்றுள்ளோம். நாம் பொறுமையாக இருப்பதாலேயே எம்மை பலவீனமானவர்களாகக் கருதக் கூடாது. இருப்பினும் பேச்சுகளின் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
இனங்களின் பெயரால் விடுதலைப் புலிகள் விரும்புவதைப் போல் இந்த மக்கள் பிளவுபடுவதை நாம் விரும்பவில்லை.
இருதரப்பு நம்பிக்கையை வளர்த்தெடுக்க அமைதிப் பேச்சுக்களை நாம் தொடங்க முடியும். அதற்கு முன்னதாக இந்தப் படுகொலைகளை தடுத்து நிறுத்துதல் எப்படி என்பது தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும்.
இதுவரை விடுதலைப் புலிகளால் 78 அரச படையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது ஆகக் கூடியதான தொகை. இதை அவர்கள் உடனே நிறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் எங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் இலங்கையர். இந்த சிறிய நாடு மீண்டும் யுத்தத்துக்கு சென்றுவிடக்கூடாது.
நாம் மூச்சுவிடக் கூட விடுதலைப் புலிகள் எமக்கு நேரம் அளிக்கவில்லை. நாம் பதவியேற்ற உடனேயே தாக்குதல்களைத் தொடங்கிவிட்டார்கள்.
பேச்சுக்கள் தொடங்கும் போது படுகொலைகளும் நிறுத்தப்பட்டு விடும். தற்போதைய பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காணப்படும். எங்களுக்கோ அவர்களுக்கோ யாரும் அழுத்தம் கொடுக்க இயலாது.
இந்த அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் நான் நீண்ட நேரம் செலவழித்து வருகிறேன் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா அரச தலைவராகப் பதவியேற்ற உடனே தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள் என்றும் தாம் மூச்சுவிடக் கூட கால அவகாசம் அளிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மீது மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு நாளை வருகை தர உள்ள நிலையில் மகிந்தவின் இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அசோசியேட்டெட் பிறஸ் செய்தி ஸ்தாபனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள நேர்காணல்:
நாம் வலிமையான இராணுவத்தைப் பெற்றுள்ளோம். நாம் பொறுமையாக இருப்பதாலேயே எம்மை பலவீனமானவர்களாகக் கருதக் கூடாது. இருப்பினும் பேச்சுகளின் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
இனங்களின் பெயரால் விடுதலைப் புலிகள் விரும்புவதைப் போல் இந்த மக்கள் பிளவுபடுவதை நாம் விரும்பவில்லை.
இருதரப்பு நம்பிக்கையை வளர்த்தெடுக்க அமைதிப் பேச்சுக்களை நாம் தொடங்க முடியும். அதற்கு முன்னதாக இந்தப் படுகொலைகளை தடுத்து நிறுத்துதல் எப்படி என்பது தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும்.
இதுவரை விடுதலைப் புலிகளால் 78 அரச படையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது ஆகக் கூடியதான தொகை. இதை அவர்கள் உடனே நிறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் எங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் இலங்கையர். இந்த சிறிய நாடு மீண்டும் யுத்தத்துக்கு சென்றுவிடக்கூடாது.
நாம் மூச்சுவிடக் கூட விடுதலைப் புலிகள் எமக்கு நேரம் அளிக்கவில்லை. நாம் பதவியேற்ற உடனேயே தாக்குதல்களைத் தொடங்கிவிட்டார்கள்.
பேச்சுக்கள் தொடங்கும் போது படுகொலைகளும் நிறுத்தப்பட்டு விடும். தற்போதைய பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காணப்படும். எங்களுக்கோ அவர்களுக்கோ யாரும் அழுத்தம் கொடுக்க இயலாது.
இந்த அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் நான் நீண்ட நேரம் செலவழித்து வருகிறேன் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

