01-22-2006, 03:23 PM
[size=18]<b>திருகோணமலையில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்! </b>
திருகோணமலை மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினது வன்முறைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் தப்பி உயிர் பிழைப்பதற்காக கடந்த இருவாரங்களில் மட்டும் மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களிலிருந்து 1,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
கடந்த சனவரி 8 ஆம் நாள் மூதூர் 58 ஆவது மைல் கட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டமைக்காக இரு அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் 50 ஆவது மைல் கட்டை இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 3 பேரைத் தவிர மற்ற அனைவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இராணுவத்தினரின் காவலில் இருந்த மூவரில் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி அலி ஒலுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
299 குடும்பங்களைச் சேர்ந்த 1216 பேர் விடுதலைப் புலிகளின் மூதூர் பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களில் 218 குடும்பங்களைச் சேர்ந்த 799 பேர் மூதூர் தங்கபுரம் பாடசாலையிலும் மூதூர் சின்னகுளம் பாடசாலையில் 437 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 154 குடும்பங்களைச் சேர்ந்த 549 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அகதிகளாக அடைக்கலமாகினர்.
இவர்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் செம்பஹா மகா வித்தியாலயத்திலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் புனர்வாழ்வுக் கழகத்தின் கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
245 குடும்பங்களைச் சேர்ந்த 1013 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாக மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மென்காமத்தைச் சேர்ந்த 76, சிவபுரத்திலிருந்து 47, பாரதிபுரத்திலிருந்து 190, கிளிவெட்டி மற்றும் குமாரபுரத்திலிருந்து 197 ஆகிய மொத்தம் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1836 பேர் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
தமிழர் புனர் வாழ்வுக்கழகம், ரோட்டறி கிளப், விருட்சம், ஐ.ஓம்.எம், இசட்.ஓ.ஏ. உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இடம்பெயர்ந்தோருக்கு வழங்கி வருகின்றன
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
திருகோணமலை மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினது வன்முறைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் தப்பி உயிர் பிழைப்பதற்காக கடந்த இருவாரங்களில் மட்டும் மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களிலிருந்து 1,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
கடந்த சனவரி 8 ஆம் நாள் மூதூர் 58 ஆவது மைல் கட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டமைக்காக இரு அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் 50 ஆவது மைல் கட்டை இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 3 பேரைத் தவிர மற்ற அனைவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இராணுவத்தினரின் காவலில் இருந்த மூவரில் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி அலி ஒலுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
299 குடும்பங்களைச் சேர்ந்த 1216 பேர் விடுதலைப் புலிகளின் மூதூர் பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களில் 218 குடும்பங்களைச் சேர்ந்த 799 பேர் மூதூர் தங்கபுரம் பாடசாலையிலும் மூதூர் சின்னகுளம் பாடசாலையில் 437 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 154 குடும்பங்களைச் சேர்ந்த 549 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அகதிகளாக அடைக்கலமாகினர்.
இவர்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் செம்பஹா மகா வித்தியாலயத்திலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் புனர்வாழ்வுக் கழகத்தின் கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
245 குடும்பங்களைச் சேர்ந்த 1013 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாக மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மென்காமத்தைச் சேர்ந்த 76, சிவபுரத்திலிருந்து 47, பாரதிபுரத்திலிருந்து 190, கிளிவெட்டி மற்றும் குமாரபுரத்திலிருந்து 197 ஆகிய மொத்தம் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1836 பேர் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
தமிழர் புனர் வாழ்வுக்கழகம், ரோட்டறி கிளப், விருட்சம், ஐ.ஓம்.எம், இசட்.ஓ.ஏ. உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இடம்பெயர்ந்தோருக்கு வழங்கி வருகின்றன
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

