01-22-2006, 01:22 PM
நிதர்சன் நீர் ஒன்று தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பளிதென்பதை தீர்மானிப்பதே அம்மணிகள் தானுங்க. ஜெயலலிதா பலமுறை சண் ரிவியை முடக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். மறுபடி ஆட்சிக்கு வந்ததும் சரத்குமார் நடத்திய கோடிஸ்வரன் நிகழ்ச்சியை முடக்க படப்பிடிப்புத்தளம் அமைந்திருந்த நேரு ஸ்ரெடியத்தில் அவற்றை இடித்துத் தள்ளினார். கோடிஸ்வரன் நிகழ்ச்சி நின்று போனது. அதன் பின்னும் சண் ரிவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்து அதனை முடக்கலாம் என்று பார்க்கின்றார். ஆனால் மத்திய அரசில் இது சார்ந்த அமைச்சுப் பொறுப்பை தயாநிதி மாறன் வைத்திருப்பதால் இதில் யார் ஜெயிக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
<i><b> </b>
</i>
</i>

