01-22-2006, 06:44 AM
<b>அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்கான முழுப்பாதுகாப்பையும் ஸ்ரீலங்கா அரசு வழங்கும் </b>
நாளை தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கும் நோர்வே நாட்டின் சிறப்புத் தூதுவர் திரு. எரிக் சோல்ஹெய்மிற்கும் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வன்னிக்கு வருகை தரவுள்ள விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கட்டுநாயக்க வானூர்தித் தளத்திலிருந்து வன்னி செல்வதற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்துள்ளது.
இதன்போது மிக பாதுகாப்பாக, அவரை வன்னிக்கு கொண்டு செல்வதற்கும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் இவர் பயணிக்கும் உலங்குவானூர்த்தியில், நோர்வே பிரதிநிதிகளும் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் சேர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
நாளை தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கும் நோர்வே நாட்டின் சிறப்புத் தூதுவர் திரு. எரிக் சோல்ஹெய்மிற்கும் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வன்னிக்கு வருகை தரவுள்ள விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கட்டுநாயக்க வானூர்தித் தளத்திலிருந்து வன்னி செல்வதற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்துள்ளது.
இதன்போது மிக பாதுகாப்பாக, அவரை வன்னிக்கு கொண்டு செல்வதற்கும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் இவர் பயணிக்கும் உலங்குவானூர்த்தியில், நோர்வே பிரதிநிதிகளும் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் சேர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

