01-22-2006, 06:34 AM
<b>யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பினை பலப்படுத்துவதில் ஸ்ரீலங்கா இராணுவம் மும்முரம் </b>
யாழ்ப்பாணத்தில் தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்துவதில் தற்போது ஸ்ரீ லங்கா இராணுவம் முழுவீச்சுடன் மும்மரமாக செயற்பட்டுவருவதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், ஸ்ரீலங்கா கடற்படையினரும், இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தமது மினி முகாம்கள், மற்றும் காவலரண்கள். மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில், புதிய பதுங்குகுழிகள், மேலதிக காவலரண்களை அமைத்து வருகின்றனர்.
இதனிடையே யாழ்ப்பாண மாநகர எல்லையினையும். 2000 ஆம் அண்டு தமிழீழ விடுதலைப்புலிகள், கடல்வழி தரையிறக்கம் இடம்பெற்ற பகுதியான கிழக்கு அரியாலை முன்னரங்கப்பகுதிகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை படைத்தரப்பினர் மும்மரப்படுத்தியுள்ளனர்.
பலாலி பிரதான இராணுவத்தளத்திலிருந்து மேலதிகமாக இந்தப் பகுதிகளுக்கு மேலதிகமாக படைத்தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய பல மினி முகாம்களும் இப்பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன.
மறுபுறத்தே ஸ்ரீ லங்கா கடற்படையினர் மீன்பிடி இறங்குதுறைகள், மற்றும் படகு இறங்குதுறைகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை பொதுமக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் முற்றாகத்தடை விதித்துள்ளனர். குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மற்றும் வடமராட்சி வடகிழக்கு பகுதிகளிலும், இரவு மீன்பிடிக்க முற்றாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர குறிகட்டுவான் இறங்குதுறை, நெடுந்தீவில் மாவலித்துறை, என்பவற்றையும் இரவு வேளைகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தரை வழித்தொடர்புகள் அற்ற தீவுப்பிரதேசங்களில் மேற்குறிப்பிட்ட இறங்குதுறைகளே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
யாழ்ப்பாணத்தில் தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்துவதில் தற்போது ஸ்ரீ லங்கா இராணுவம் முழுவீச்சுடன் மும்மரமாக செயற்பட்டுவருவதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், ஸ்ரீலங்கா கடற்படையினரும், இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தமது மினி முகாம்கள், மற்றும் காவலரண்கள். மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில், புதிய பதுங்குகுழிகள், மேலதிக காவலரண்களை அமைத்து வருகின்றனர்.
இதனிடையே யாழ்ப்பாண மாநகர எல்லையினையும். 2000 ஆம் அண்டு தமிழீழ விடுதலைப்புலிகள், கடல்வழி தரையிறக்கம் இடம்பெற்ற பகுதியான கிழக்கு அரியாலை முன்னரங்கப்பகுதிகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை படைத்தரப்பினர் மும்மரப்படுத்தியுள்ளனர்.
பலாலி பிரதான இராணுவத்தளத்திலிருந்து மேலதிகமாக இந்தப் பகுதிகளுக்கு மேலதிகமாக படைத்தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய பல மினி முகாம்களும் இப்பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன.
மறுபுறத்தே ஸ்ரீ லங்கா கடற்படையினர் மீன்பிடி இறங்குதுறைகள், மற்றும் படகு இறங்குதுறைகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை பொதுமக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் முற்றாகத்தடை விதித்துள்ளனர். குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மற்றும் வடமராட்சி வடகிழக்கு பகுதிகளிலும், இரவு மீன்பிடிக்க முற்றாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர குறிகட்டுவான் இறங்குதுறை, நெடுந்தீவில் மாவலித்துறை, என்பவற்றையும் இரவு வேளைகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தரை வழித்தொடர்புகள் அற்ற தீவுப்பிரதேசங்களில் மேற்குறிப்பிட்ட இறங்குதுறைகளே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

