01-22-2006, 06:30 AM
<b>திருக்கோணமலையில் பொதிகுண்டு வெடித்ததில் 3 படையினர் படுகாயம். </b>
திருமலையில் நேற்று சனிக்கிழமை இரவு பொதிகுண்டு வெடித்ததில் மூன்று சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் நேற்றிரவு 8.20 மணியளவில் திருக்கோணமலை மத்திய வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இந்த பொதிகுண்டு வெடித்துள்ளது.
வர்த்த வங்கிக்கு முன்பாக காணப்பட்ட பொதியை கண்ட சிறீலங்கா படையினர் அதனைப் பிரித்துப் பார்த்த போது பொதியினுள் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. இதன்போது 3 சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூன்று படையினரும் திருக்கோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த படையினரில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதிகுண்டானது தூரத்திலிருந்து தொலை இயக்கி மூலம் வெடிக்க வைக்கக்பட்டிருக்கலாம் என சிறீலங்கா படைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன
<i><b>பதிவு.கொம்</b></i>
திருமலையில் நேற்று சனிக்கிழமை இரவு பொதிகுண்டு வெடித்ததில் மூன்று சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் நேற்றிரவு 8.20 மணியளவில் திருக்கோணமலை மத்திய வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இந்த பொதிகுண்டு வெடித்துள்ளது.
வர்த்த வங்கிக்கு முன்பாக காணப்பட்ட பொதியை கண்ட சிறீலங்கா படையினர் அதனைப் பிரித்துப் பார்த்த போது பொதியினுள் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. இதன்போது 3 சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூன்று படையினரும் திருக்கோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த படையினரில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதிகுண்டானது தூரத்திலிருந்து தொலை இயக்கி மூலம் வெடிக்க வைக்கக்பட்டிருக்கலாம் என சிறீலங்கா படைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன
<i><b>பதிவு.கொம்</b></i>
"
"
"

