01-22-2006, 06:16 AM
<b><span style='color:red'>திருமலை மாணவர்கள் படுகொலையில் பின்னணியில் யார்?:
திருகோணமலை மாணவர்கள் படுகொலையின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இரா.சம்பந்தன் அளித்த நேர்காணல் விவரம்:
தமிழர் பிரதேசங்களில் பல படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த சம்பவங்களில் தொடர்புடைய எவருமே நீதியின் முன்னாள் நிறுத்தப்பட்டதில்லை. இந்தப் படுகொலைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றில் வெறும் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் தரப்படுகின்றனவே தவிர எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படியான நடவடிக்கைகள் கூட கண்துடைப்புக்குரியனவாக இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லவே நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களை நாம் நடத்தினோம்.
பெருந்தொகையான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். எதுவித காரணமும் இல்லாமல் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் குறிப்பாக கொழும்பிலும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டைக் கண்டிக்கும் வகையில், எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில் நாம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம். இது தொடர்பிலான கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றில் விவாதிக்க அனுமதி கோரினோம். எமக்கு நீதி வழங்கப்படாத நிலையில் நாம் நாடாளுமன்றத்துக்குள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மூன்று நாட்களாக நடத்தினோம்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்குள்ளாகாமல் இருப்பதற்கான உறுதியான நடவடிக்கையையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்தச் செயற்பாடுகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையே அரசாங்கத்தினது உடனடி நடவடிக்கையாக நாம் எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் இந்த வன்முறைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதை ஏற்க வேண்டும்.
அரச படையினர் கொல்லப்படுதல் தொடர்பில் நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் இந்தக் கொலைகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பாக வேண்டும்.
திருகோணமலை மாணவர்களின் படுகொலைக்குப் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியினரது தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நாம் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை அரசியலாக்க விரும்பவில்லை.
இந்தப் படுகொலைகள் தொடர்பில் எம்மிடம் கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, இராணுவத்தினரது ஒரு பகுதியினர்தான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்றார். எந்த ஒரு படையினரும் சம்பவம் நடந்த பகுதியில் தாக்குதலுக்குள்ளாகாத நிலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை ஒரு திட்டமிட்ட படுகொலை. இந்தப் படுகொலை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். மாணவர்களின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டால் தடயவியல் நடவடிக்கை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட முடியும்.
எமது நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்கிற தகுதியும் அருகதையும் ஜே.வி.பிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இல்லை.
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது இந்த இரு கட்சிகளும் மேற்கொண்ட செயற்பாடுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு கட்டமைப்பு அது. அவ்வளவுதான். நாங்கள் விடுதலைப் புலிகளின் நிழல் பிரதிகள் அல்ல. தமிழ் மக்களின் நலன்களுக்காக அவர்களது எதிர்காலத்துக்காக அமைதி முயற்சிகள் அர்த்தமுள்ள வகைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இணைந்து செயற்படுகிறோம். தற்போதைய அமைதி முயற்சிகள் பின்னடைந்துள்ளமைக்கு ஜே.வி.பி.தான் பொறுப்பேற்க வேண்டும்.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா காலத்திலும், ரணில் பிரதமராக இருந்த காலத்திலும் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இப்போதும் அமைதி முயற்சிகளுக்குத் தடை போடுகிறவர்கள் ஜே.வி.பி.யினர் என்பதால் அவர்களே இதற்குப் பொறுப்பு. அவர்கள்தான் நாட்டை இந்த ஆபத்தான நிலைக்குத் தள்ளியவர்கள்.
எம்மைப் பொறுத்தவரையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில் அரசாங்கங்களோடும் அரச தலைவர்கள் மற்றும் பிரதமர்களோடும் தொடர்பில்தான் இருந்து வருகிறோம். அமைதி முயற்சிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகிறோம். இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் நாம் விவாதித்துள்ளோம். நாம் எம்மாலான ஆகக் கூடிய பணிகளை சரியாகவே செய்துள்ளோம்.
நாம் ஒரு ஜனநாயக ரீதியான அரசியல் கட்சியினர். வடக்கு கிழக்கு மக்களினால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவர்கள். நாங்கள் எம்மால் முடிந்த ஆகக் கூடிய பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம். ஆனால் சிறிலங்க அரசானது நாடு விடுதலையடைந்த 1947ஆம் ஆண்டு முதல் எங்களைவிட சிறப்பாக செயற்பட்டிருக்கலாம். ஆனால் அப்படியாக எதும் நடைபெறவில்லை.
விடுதலைப் புலிகளை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆயுதக் குழுக்கள் தோன்றாத காலத்திலே தமிழ் அரசியல் தலைவர்கள் தீவிரமாக செயற்பட்ட காலத்திலே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.
ஆயுதக் குழுக்கள் உருவான பின்பும் கூட முன்பைப் போலவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இதுவே உண்மை. ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு நிராகரிப்பட்டமையும் சிறிலங்கா அரசாங்கம் எதுவும் செய்யாது என்பதற்கு உதாரணமாகும்.
அரசாங்கம் உடனே பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் அதற்கு உதவ தயாராக உள்ளோம் என்றார் இரா. சம்பந்தன்.</span>
<i>[b]தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
திருகோணமலை மாணவர்கள் படுகொலையின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இரா.சம்பந்தன் அளித்த நேர்காணல் விவரம்:
தமிழர் பிரதேசங்களில் பல படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த சம்பவங்களில் தொடர்புடைய எவருமே நீதியின் முன்னாள் நிறுத்தப்பட்டதில்லை. இந்தப் படுகொலைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றில் வெறும் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் தரப்படுகின்றனவே தவிர எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படியான நடவடிக்கைகள் கூட கண்துடைப்புக்குரியனவாக இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லவே நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களை நாம் நடத்தினோம்.
பெருந்தொகையான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். எதுவித காரணமும் இல்லாமல் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் குறிப்பாக கொழும்பிலும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டைக் கண்டிக்கும் வகையில், எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில் நாம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம். இது தொடர்பிலான கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றில் விவாதிக்க அனுமதி கோரினோம். எமக்கு நீதி வழங்கப்படாத நிலையில் நாம் நாடாளுமன்றத்துக்குள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மூன்று நாட்களாக நடத்தினோம்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்குள்ளாகாமல் இருப்பதற்கான உறுதியான நடவடிக்கையையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்தச் செயற்பாடுகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையே அரசாங்கத்தினது உடனடி நடவடிக்கையாக நாம் எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் இந்த வன்முறைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதை ஏற்க வேண்டும்.
அரச படையினர் கொல்லப்படுதல் தொடர்பில் நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் இந்தக் கொலைகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பாக வேண்டும்.
திருகோணமலை மாணவர்களின் படுகொலைக்குப் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியினரது தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நாம் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை அரசியலாக்க விரும்பவில்லை.
இந்தப் படுகொலைகள் தொடர்பில் எம்மிடம் கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, இராணுவத்தினரது ஒரு பகுதியினர்தான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்றார். எந்த ஒரு படையினரும் சம்பவம் நடந்த பகுதியில் தாக்குதலுக்குள்ளாகாத நிலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை ஒரு திட்டமிட்ட படுகொலை. இந்தப் படுகொலை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். மாணவர்களின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டால் தடயவியல் நடவடிக்கை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட முடியும்.
எமது நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்கிற தகுதியும் அருகதையும் ஜே.வி.பிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இல்லை.
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது இந்த இரு கட்சிகளும் மேற்கொண்ட செயற்பாடுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு கட்டமைப்பு அது. அவ்வளவுதான். நாங்கள் விடுதலைப் புலிகளின் நிழல் பிரதிகள் அல்ல. தமிழ் மக்களின் நலன்களுக்காக அவர்களது எதிர்காலத்துக்காக அமைதி முயற்சிகள் அர்த்தமுள்ள வகைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இணைந்து செயற்படுகிறோம். தற்போதைய அமைதி முயற்சிகள் பின்னடைந்துள்ளமைக்கு ஜே.வி.பி.தான் பொறுப்பேற்க வேண்டும்.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா காலத்திலும், ரணில் பிரதமராக இருந்த காலத்திலும் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இப்போதும் அமைதி முயற்சிகளுக்குத் தடை போடுகிறவர்கள் ஜே.வி.பி.யினர் என்பதால் அவர்களே இதற்குப் பொறுப்பு. அவர்கள்தான் நாட்டை இந்த ஆபத்தான நிலைக்குத் தள்ளியவர்கள்.
எம்மைப் பொறுத்தவரையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில் அரசாங்கங்களோடும் அரச தலைவர்கள் மற்றும் பிரதமர்களோடும் தொடர்பில்தான் இருந்து வருகிறோம். அமைதி முயற்சிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகிறோம். இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் நாம் விவாதித்துள்ளோம். நாம் எம்மாலான ஆகக் கூடிய பணிகளை சரியாகவே செய்துள்ளோம்.
நாம் ஒரு ஜனநாயக ரீதியான அரசியல் கட்சியினர். வடக்கு கிழக்கு மக்களினால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவர்கள். நாங்கள் எம்மால் முடிந்த ஆகக் கூடிய பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம். ஆனால் சிறிலங்க அரசானது நாடு விடுதலையடைந்த 1947ஆம் ஆண்டு முதல் எங்களைவிட சிறப்பாக செயற்பட்டிருக்கலாம். ஆனால் அப்படியாக எதும் நடைபெறவில்லை.
விடுதலைப் புலிகளை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆயுதக் குழுக்கள் தோன்றாத காலத்திலே தமிழ் அரசியல் தலைவர்கள் தீவிரமாக செயற்பட்ட காலத்திலே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.
ஆயுதக் குழுக்கள் உருவான பின்பும் கூட முன்பைப் போலவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இதுவே உண்மை. ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு நிராகரிப்பட்டமையும் சிறிலங்கா அரசாங்கம் எதுவும் செய்யாது என்பதற்கு உதாரணமாகும்.
அரசாங்கம் உடனே பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் அதற்கு உதவ தயாராக உள்ளோம் என்றார் இரா. சம்பந்தன்.</span>
<i>[b]தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

