01-21-2006, 07:14 PM
<b>ஈபிடிபினரால் ஊர்காவற்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை.</b>
ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.இவர் தனது வார்த்தக நிறுவனத்தைப் ப+ட்டிவிட்டு இரவு 8.00 மணியளவில் வீட்டுக்கு வரும் வேளையில் காத்திருந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியாகராசா ரவிச்சந்திரன் வயது 34 என்னும் இளம் குடும்பஸ்தரே துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி பலியாகியுள்ளார் இவரை அப் பகுதியில் நிலை கொண்டுள்ள ஈ.பி.டி.பி ஆயுதப்படையினரும் மற்றும் கடற்படையினரும் இனைந்தே கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை முகாமுக்கு அண்மையாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டக் கூடியதாக இருப்பதுடன் ஏற்கனவே இப் பகுதியில் இடம் பெற்ற பல கொலைகளின் பின்னால் கடற்படையினரும் ஈ.பி.டி.பி.யினரும் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
1991ம் ஆண்டு முதல் ஈ.பி.டி.பி.யினர் இப் பகுதி பொது மக்களை அடக்கு முறைக்குள் வைத்து அவர்கள் மீது பல் வேறு பலாத்கார செயல்பாடுகளையும் மேற் கொண்டு வந்தார்கள் ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொது மக்கள் ஈ.பி.டி.பி.யினரின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்ததன் காரணமாக இத்தகைய படு கொலைகளை செய்வதில் கடற் படையினரும் ஈ.பி.டி.பி.யினரும் ஈடுபடுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்
<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.இவர் தனது வார்த்தக நிறுவனத்தைப் ப+ட்டிவிட்டு இரவு 8.00 மணியளவில் வீட்டுக்கு வரும் வேளையில் காத்திருந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியாகராசா ரவிச்சந்திரன் வயது 34 என்னும் இளம் குடும்பஸ்தரே துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி பலியாகியுள்ளார் இவரை அப் பகுதியில் நிலை கொண்டுள்ள ஈ.பி.டி.பி ஆயுதப்படையினரும் மற்றும் கடற்படையினரும் இனைந்தே கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை முகாமுக்கு அண்மையாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டக் கூடியதாக இருப்பதுடன் ஏற்கனவே இப் பகுதியில் இடம் பெற்ற பல கொலைகளின் பின்னால் கடற்படையினரும் ஈ.பி.டி.பி.யினரும் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
1991ம் ஆண்டு முதல் ஈ.பி.டி.பி.யினர் இப் பகுதி பொது மக்களை அடக்கு முறைக்குள் வைத்து அவர்கள் மீது பல் வேறு பலாத்கார செயல்பாடுகளையும் மேற் கொண்டு வந்தார்கள் ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொது மக்கள் ஈ.பி.டி.பி.யினரின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்ததன் காரணமாக இத்தகைய படு கொலைகளை செய்வதில் கடற் படையினரும் ஈ.பி.டி.பி.யினரும் ஈடுபடுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்
<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
"

