01-21-2006, 07:11 PM
<b>வன்னிக்கு இடம்பெயர்ந்தோரை அனுப்பி வைத்த தமிழ் வர்த்தகர் சுட்டுப் படுகொலை </b>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:27 ஈழம்] [ம.சேரமான்]
யாழ். தென்மராட்சியில் தமிழர் வர்த்தகரான இந்திரன் என்ற நடராஜா யோகேஸ்வரராஜ(வயது 30)வை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்தனர்.
கொடிகாமத்துக்கும் சாவகச்சேரிக்கும் இடையே ஏ௯ நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் வர்த்தகரான இந்திரன் என்ற நடராஜா யோகேஸ்வரராஜ, புத்தூர் சந்தியில் வீரசிங்கம் மகா வித்தியாலம் அருகே உணவகம் மற்றும் போக்குவரவு நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
இந்த சம்பவத்தில் நடராஜா யோகேஸ்வரராஜவின் உறவினரான நந்தகுமார்(வயது 23) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக யாழிலிருந்து இடம்பெயர்ந்தோரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு முகமாலை சந்திய+டாக அனுப்பி வைக்கும் போக்குவரவு ஒழுங்குகளை இந்திரன் மேற்கொண்டிருந்தர்.
இந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதிக்கு அருகாமையில் சிறிலங்கா இராணுவ சோதனைச்சாவடி மற்றும் சிறிலங்கா இராணுவ முகாம் ஆகியவை அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த ஏ௯ நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பாதுகாப்புப் படையினர் நடமாட்டம் உள்ள அதிக போக்குவரவு உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
யாழிலிருந்து இடம்பெயருவதைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
<i><b>புதினம்.கொம்</b></i>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:27 ஈழம்] [ம.சேரமான்]
யாழ். தென்மராட்சியில் தமிழர் வர்த்தகரான இந்திரன் என்ற நடராஜா யோகேஸ்வரராஜ(வயது 30)வை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்தனர்.
கொடிகாமத்துக்கும் சாவகச்சேரிக்கும் இடையே ஏ௯ நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் வர்த்தகரான இந்திரன் என்ற நடராஜா யோகேஸ்வரராஜ, புத்தூர் சந்தியில் வீரசிங்கம் மகா வித்தியாலம் அருகே உணவகம் மற்றும் போக்குவரவு நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
இந்த சம்பவத்தில் நடராஜா யோகேஸ்வரராஜவின் உறவினரான நந்தகுமார்(வயது 23) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக யாழிலிருந்து இடம்பெயர்ந்தோரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு முகமாலை சந்திய+டாக அனுப்பி வைக்கும் போக்குவரவு ஒழுங்குகளை இந்திரன் மேற்கொண்டிருந்தர்.
இந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதிக்கு அருகாமையில் சிறிலங்கா இராணுவ சோதனைச்சாவடி மற்றும் சிறிலங்கா இராணுவ முகாம் ஆகியவை அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த ஏ௯ நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பாதுகாப்புப் படையினர் நடமாட்டம் உள்ள அதிக போக்குவரவு உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
யாழிலிருந்து இடம்பெயருவதைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
<i><b>புதினம்.கொம்</b></i>
"
"
"

