01-21-2006, 06:25 PM
<b>சிறிலங்கா வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு </b>
சிறிலங்கா வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று நாட்கள் நாடாளுமன்றம் கடந்த 17, 18, 19 ஆகிய நாட்களில்தான் ஒத்திவைக்கப்பட்டது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரியாணி விஜேசேகர கூறியதாவது:
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையைக் கண்டித்தும் வடக்கு - கிழக்கில் இராணுவ வன்முறைகளைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதிலும் பிரச்சனைகள் சில மணிநேரங்களிலோ ஒருநாளிலோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் இம்முறை மூன்று நாட்கள் நாடாளுமன்றம் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் நாடாளுமன்றத்தை நிர்வகிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருந்தாலும் நாடாளுமன்றம் முழுமையும் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.
அதாவது சபாநாயகர் முன்வைக்கும் தீர்மானத்தை ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரோ வழிமொழிந்து அதன் மீது வாக்கெடுப்பை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்
<b><i>தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
சிறிலங்கா வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று நாட்கள் நாடாளுமன்றம் கடந்த 17, 18, 19 ஆகிய நாட்களில்தான் ஒத்திவைக்கப்பட்டது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரியாணி விஜேசேகர கூறியதாவது:
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையைக் கண்டித்தும் வடக்கு - கிழக்கில் இராணுவ வன்முறைகளைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதிலும் பிரச்சனைகள் சில மணிநேரங்களிலோ ஒருநாளிலோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் இம்முறை மூன்று நாட்கள் நாடாளுமன்றம் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் நாடாளுமன்றத்தை நிர்வகிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருந்தாலும் நாடாளுமன்றம் முழுமையும் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.
அதாவது சபாநாயகர் முன்வைக்கும் தீர்மானத்தை ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரோ வழிமொழிந்து அதன் மீது வாக்கெடுப்பை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்
<b><i>தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
"

