01-21-2006, 06:22 PM
<b>பாலசிங்கத்துக்கு உலங்கு வானூர்தி அளிக்க அரசாங்கம் இணக்கம்
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
நோர்வேயின் விசேடப் பிரதிநிதி எரிக் சொல்ஹெயிமிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு விமானப்படை உலங்கு வானூர்த்தியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.
இப்பயணத்தின் போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் பாலசிங்கத்தின் பாதுகாப்பின் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளது என்று சமாதான செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்ரன் பாலசிங்கமும் வருகை தந்தால் மட்டுமே எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பில் தான் கலந்துகொள்வதாக நோர்வே பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாலசிங்கத்துக்கு வானூர்தி வழங்குவது சிக்கலானது என்ற போதிலும் அரசாங்கம் இதற்கு இணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த உலங்கு வானூர்தியில் யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களும் பயணிக்கவுள்ளனர்.
அருகம்பேயில் விமானப்படை உலங்கு வானூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் உதவி வழங்கும் நாடுகளின் தூதர்கள் கிளிநொச்சிக்கு ஓமந்தை சோதனைச் சாவடி வரை வானூர்தியில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[b]<i>
தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
நோர்வேயின் விசேடப் பிரதிநிதி எரிக் சொல்ஹெயிமிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு விமானப்படை உலங்கு வானூர்த்தியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.
இப்பயணத்தின் போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் பாலசிங்கத்தின் பாதுகாப்பின் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளது என்று சமாதான செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்ரன் பாலசிங்கமும் வருகை தந்தால் மட்டுமே எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பில் தான் கலந்துகொள்வதாக நோர்வே பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாலசிங்கத்துக்கு வானூர்தி வழங்குவது சிக்கலானது என்ற போதிலும் அரசாங்கம் இதற்கு இணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த உலங்கு வானூர்தியில் யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களும் பயணிக்கவுள்ளனர்.
அருகம்பேயில் விமானப்படை உலங்கு வானூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் உதவி வழங்கும் நாடுகளின் தூதர்கள் கிளிநொச்சிக்கு ஓமந்தை சோதனைச் சாவடி வரை வானூர்தியில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[b]<i>
தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
"

