01-21-2006, 07:29 AM
<b>[size=18]வன்முறைகளை கட்டுப்படுத்த தவறினால் போராட்டம் தொடரும்:
வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறும் கோரி நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வன்முறைகளை கட்டுப்படுத்தவும், படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் தவறும் பட்த்தில் போராட்டத்தினை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேன் ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த புதன்கிழமை (18.01.06) எமது பிரதிநிதிகளை உங்கள் அமைச்ர்கள் சிலர் கிதம் அழைத்து தற்போதைய நிலைவரம் குறித்து பேசினீர்கள். எமது நிலை குறித்து நீங்கள் எம்மைச் சந்திப்பதற்கு கவனம் செலுத்தியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, உங்கள் முன் சில விடயங்களை முன்வைத்தோம்.
அவையாவன:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் கொலை செய்யப்பட்டமை.
பிரபல ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் மற்றும் இளையதம்பி தர்சினி எனும் தமிழ்ப் பெண் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு பிரதேத்தில் கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை. இது நீங்கள் அரச தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த சம்பவம்.
இந்தக் கொடூரமான வன்முறைச சம்பவங்கள் மீது அரசாங்கம் நீதியான விசாரணையை முன்னெடுக்கத் தவறியதோடு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பதும் மிகவும் அப்பட்டமான உண்மை.
அத்தோடு இவை மட்டுமல்லாது அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தில் கலந்து கொள்ளும் வேளையில் தேவாலயத்திற்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டமை.
இக்கொலையானது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு அரசாங்கப் படைத்தரப்பினர் சிலரின் துணையோடே நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் எந்த ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுத்து இதுவரை எவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவுமில்லை.
திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை. இது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற உச்கட்ட அராஜகமாகும். இந்த இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளதாக மரண விசாரணைகள் புலப்படுத்தியுள்ளன. இக்கொலைகள் இடம்பெற்று இரு வாரங்கள் ஆகியும் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை.
கடந்த திங்கட்கிழமை (16.01.06) அரச கட்டுப்பாட்டுப் பிரதேமான யாழ். மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து செற்படும் துப்பாக்கிக் குழுக்களாலும் சுடப்பட்டு மூவர் மரணமானதும் இருவர் படுகாயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
மன்னாரில் கடந்த வருடம் டிம்பர் 23 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய், மகள், மகன் என நான்கு பேர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு எரிக்கப்பட்டும் உள்ளனர்.
இராணுவத்தினரால் தமிழ் குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
தமிழ் மக்கள் மீதான கொலைகளும் வன்முறைகளும் மற்றும் குறிப்பாக கொழும்பில் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்களை இரவு உடுப்புக்களுடன் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதும், புகைப்படங்கள் எடுப்பதும் போன்ற பற்பல அராஜகமான அடிப்படை மனித உரிமை மீறல்களும் பாரியளவில் அதிகரித்து வருகின்றன.
இவை அனைத்திற்கும் நீங்கள் கடந்த புதன்கிழமை எமக்கு உறுதியளித்தபடி தகுந்த விசாரணைகளும் தகுந்த நடவடிக்கைகளும் எடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.
யாழ். மாவட்டத்தில் 42 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு - கிழக்கில் 50 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். அண்மைக் காலத்தில் நடந்துள்ள நிலைமை இது.
வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் குடிமக்கள் மீது நிலவும் பயங்கர சூழ்நிலை அகற்றப்பட்டு அவர்களும் இந்நாட்டு மக்களாக சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i>[b]தகவல்மூலம்;- புதினம்</b></i>
வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறும் கோரி நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வன்முறைகளை கட்டுப்படுத்தவும், படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் தவறும் பட்த்தில் போராட்டத்தினை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேன் ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த புதன்கிழமை (18.01.06) எமது பிரதிநிதிகளை உங்கள் அமைச்ர்கள் சிலர் கிதம் அழைத்து தற்போதைய நிலைவரம் குறித்து பேசினீர்கள். எமது நிலை குறித்து நீங்கள் எம்மைச் சந்திப்பதற்கு கவனம் செலுத்தியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, உங்கள் முன் சில விடயங்களை முன்வைத்தோம்.
அவையாவன:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் கொலை செய்யப்பட்டமை.
பிரபல ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் மற்றும் இளையதம்பி தர்சினி எனும் தமிழ்ப் பெண் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு பிரதேத்தில் கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை. இது நீங்கள் அரச தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த சம்பவம்.
இந்தக் கொடூரமான வன்முறைச சம்பவங்கள் மீது அரசாங்கம் நீதியான விசாரணையை முன்னெடுக்கத் தவறியதோடு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பதும் மிகவும் அப்பட்டமான உண்மை.
அத்தோடு இவை மட்டுமல்லாது அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தில் கலந்து கொள்ளும் வேளையில் தேவாலயத்திற்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டமை.
இக்கொலையானது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு அரசாங்கப் படைத்தரப்பினர் சிலரின் துணையோடே நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் எந்த ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுத்து இதுவரை எவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவுமில்லை.
திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை. இது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற உச்கட்ட அராஜகமாகும். இந்த இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளதாக மரண விசாரணைகள் புலப்படுத்தியுள்ளன. இக்கொலைகள் இடம்பெற்று இரு வாரங்கள் ஆகியும் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை.
கடந்த திங்கட்கிழமை (16.01.06) அரச கட்டுப்பாட்டுப் பிரதேமான யாழ். மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து செற்படும் துப்பாக்கிக் குழுக்களாலும் சுடப்பட்டு மூவர் மரணமானதும் இருவர் படுகாயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
மன்னாரில் கடந்த வருடம் டிம்பர் 23 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய், மகள், மகன் என நான்கு பேர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு எரிக்கப்பட்டும் உள்ளனர்.
இராணுவத்தினரால் தமிழ் குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
தமிழ் மக்கள் மீதான கொலைகளும் வன்முறைகளும் மற்றும் குறிப்பாக கொழும்பில் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்களை இரவு உடுப்புக்களுடன் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதும், புகைப்படங்கள் எடுப்பதும் போன்ற பற்பல அராஜகமான அடிப்படை மனித உரிமை மீறல்களும் பாரியளவில் அதிகரித்து வருகின்றன.
இவை அனைத்திற்கும் நீங்கள் கடந்த புதன்கிழமை எமக்கு உறுதியளித்தபடி தகுந்த விசாரணைகளும் தகுந்த நடவடிக்கைகளும் எடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.
யாழ். மாவட்டத்தில் 42 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு - கிழக்கில் 50 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். அண்மைக் காலத்தில் நடந்துள்ள நிலைமை இது.
வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் குடிமக்கள் மீது நிலவும் பயங்கர சூழ்நிலை அகற்றப்பட்டு அவர்களும் இந்நாட்டு மக்களாக சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i>[b]தகவல்மூலம்;- புதினம்</b></i>
"
"
"

