01-21-2006, 06:58 AM
<b>அம்பிளாந்துறை தமிழ் எழுச்சிப் பேரணியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு </b>
மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தமிழ்த்தேசிய எழுச்சிப் பேரணி நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அம்பிளாந்துறை விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் போரதீவுப் பற்று, பட்டிப்பளை, கரடியனாறு, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து பேரணியாக வந்த மக்கள் தேசியத் தலைவரின் உருவப்படங்களை தாங்கியிருந்தனர். அம்பிளாந்துறைச் சந்திலிருந்து கோசங்களை எழுப்பிய வண்ணம் மைதானத்தை வந்தடைந்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அம்பிளாந்துறை பாடசாலையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் நிகழ்வுகள் இடம் பெற்றது இதில் பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் செந்தேவனின் தாயான திருமதி.ந.பாக்கியம் ஏற்றி வைக்க தேசியக் கொடியினை இரு மாவீரர்களின் தந்தையான மா.தருமலிங்கம் ஏற்றி வைத்தார். பின்பு அகவணக்கத்தினை தொடர்ந்து தலைமையுரை இடம் பெற்றது.
அடுத்ததாக தமிழ்த்தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது. பின்னர் களுத்துறைச் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கும் றொபட் அவர்களால் எழுதப்பட்ட கவிதை கவிஞர் மா.தணிகாசலத்தினால் வாசிக்கப்பட்டது.
பின்பு அரங்கச் செயற்பாட்டு குழுவினரால் எழுச்சிப் பாடலும், எழுச்சி கோசமும் இடம்பெற்று கண்டன பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரநிதியினை மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பிரதி நிதி டிக்ஜோன் என்பவரிடம் கையளிக்கப்பட்டதோடு நோர்வே தூதுவர் மற்றும், அமெரிக்க தூதுவர் ஆகியோருக்கும் பிரதிநிதிகள் அனுப்பட்டது.
இவ்வெழுச்சிப் பேரணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவட்ட தளபதி நாகேஸ், தளபதி பிரபா, மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு, மாவட்ட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் மனோகரன் உள்ளீட்ட பொறுப்பாளர்கள், போராளிகள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தமிழ்த்தேசிய எழுச்சிப் பேரணி நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அம்பிளாந்துறை விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் போரதீவுப் பற்று, பட்டிப்பளை, கரடியனாறு, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து பேரணியாக வந்த மக்கள் தேசியத் தலைவரின் உருவப்படங்களை தாங்கியிருந்தனர். அம்பிளாந்துறைச் சந்திலிருந்து கோசங்களை எழுப்பிய வண்ணம் மைதானத்தை வந்தடைந்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அம்பிளாந்துறை பாடசாலையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் நிகழ்வுகள் இடம் பெற்றது இதில் பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் செந்தேவனின் தாயான திருமதி.ந.பாக்கியம் ஏற்றி வைக்க தேசியக் கொடியினை இரு மாவீரர்களின் தந்தையான மா.தருமலிங்கம் ஏற்றி வைத்தார். பின்பு அகவணக்கத்தினை தொடர்ந்து தலைமையுரை இடம் பெற்றது.
அடுத்ததாக தமிழ்த்தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது. பின்னர் களுத்துறைச் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கும் றொபட் அவர்களால் எழுதப்பட்ட கவிதை கவிஞர் மா.தணிகாசலத்தினால் வாசிக்கப்பட்டது.
பின்பு அரங்கச் செயற்பாட்டு குழுவினரால் எழுச்சிப் பாடலும், எழுச்சி கோசமும் இடம்பெற்று கண்டன பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரநிதியினை மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பிரதி நிதி டிக்ஜோன் என்பவரிடம் கையளிக்கப்பட்டதோடு நோர்வே தூதுவர் மற்றும், அமெரிக்க தூதுவர் ஆகியோருக்கும் பிரதிநிதிகள் அனுப்பட்டது.
இவ்வெழுச்சிப் பேரணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவட்ட தளபதி நாகேஸ், தளபதி பிரபா, மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு, மாவட்ட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் மனோகரன் உள்ளீட்ட பொறுப்பாளர்கள், போராளிகள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

