01-21-2006, 12:25 AM
அரித்ராவை நீங்கள் அறிவீர்கள்!
அரித்ரா
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2a.jpg' border='0' alt='user posted image'>
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா!
92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த வழக் கறிஞர் துரைசாமியின் முயற்சியால் சமீபத்தில் நீதிமன்றம் அரித்ராவைத் தமிழகம் அழைத்து வர அனுமதி வழங்கியது. நீண்ட போராட்டத் துக்குப் பிறகு சிறையில் இருக்கும் தன் அம்மா& அப்பாவைச் சந்தித்தார் அரித்ரா!
நளினி
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2.jpg' border='0' alt='user posted image'>
இந்த நெகிழ்ச்சியான கதை ஒரு பக்கமிருக்க, இன்னொரு புறம் ஈழம் சிவக்கிறது மறுபடியும்!
முப்பது ஆண்டு களாகத் தொடரும் ஆயுதப் போராட்டத்தில், இப்போது அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டால், இதுவே இறுதிப் போராக இருக்கும்!
ஈழத்துக் கடற்கரை யில் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாடும் குழந்தைகளின் கால்களில் மீண்டும் சடலங்கள் இடறும் சூழல் கவிகிறது. நான்காண்டு கால அமைதி முடிவுக்கு வந்து, இப்போது மீண்டும் தமிழர்கள் மீதான வன்முறை தொடங்கியிருக்கிறது. மாணவர்கள், இளம் பெண்கள் ராணுவத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார அமைப்புத் திட்டத்தை பேச்சுவார்த்தை காலத்தில் ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, இப்போது பொய் நாடகம் ஆடுகிறது. ஒற்றையாட்சி முறையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இலங்கை அரசாங்கம் ஆதரவை நாடி வந்தால், மீண்டும் ஒரு முறை இந்தியா ஏமாந்துவிடக் கூடாது. இலங்கை அரசுக்கு ராணுவ உதவி இந்தியா செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று நம்புகிறோம்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் & பிரான்ஸில் வாழும் ஈழத்துக் கவிஞர் கி.பி. அரவிந்தன்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p3.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அரசியல் விமர்சகர், ÔÔஈழத் தமிழர்கள் இடைப்பட்ட இந்த நான்கு வருட யுத்த அமைதி காலத்தில் புலிகளுடன் சேர்ந்து தங்களுக்கென அறிவிக்கப்படாத தாய் தேசமான ஈழத்தைக் கிட்டத்தட்டக் கட்டியெழுப்பி விட்டனர்" என்கிறார்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ நடுவப் பணியகம், தமிழீழக் காவல் துறை, தமிழீழ வைப்பகம்(வங்கி), தமிழீழ நீதிமன்றம், தமிழீழச் சுங்கத் துறை, சட்டக் கல்லூரி, கல்வித் துறை என்று துறைவாரியாகப் பிரித்து, சீரான நிர்வாகத்துடன் புலிகளின் ஆட்சி நடக்கிறது. தேசிய மலராக காந்தள் மலரையும், தேசியப் பறவை யாக செண்பகப் பறவையையும், தேசிய விலங்காக சிறுத்தைப் புலியை யும் ஏற்கெனவே அறிவித்த புலிகள், சமீபத்தில் தங்கள் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சட்ட வரைவாக வெளியிட்டு உள்ளனர்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4a.jpg' border='0' alt='user posted image'>
முல்லைத் தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி என்று ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்தை இயக்குகிறார்கள். விவசாயத்துக்கும் கல்விக்கும் மானியங் களை வழங்கும் அளவு வளர்ந்திருக்கிறார்கள்.
போராளிகள்! முறையான போர்ப் பயிற்சியோடு ஈழம் பற்றிய தத்துவப் படிப்பும் கட்டாயம் படித்தாக வேண்டும். வெறும் ஆயுதப் போராளி களாக மட்டும் இளைஞர்களை வைத்திருக்காமல், அரசியல் விஞ்ஞானத்தையும் புலிகளின் கல்லூரி கற்றுக்கொடுக்கிறது. தமிழீழக் குற்றவியல் சட்டம் இப்போதே நடைமுறையில் இருக்கிறதாம்!
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6a.jpg' border='0' alt='user posted image'>
இது தவிர, கஸ்டம்ஸ் துறையையும் ஏற்படுத்தி, ஈழத்திலிருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வரிகளை வகுத்து அதை வருவாய்ப் பிரிவின் பொறுப்பில் விட்டிருக்கிறார்கள். யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு நாடாக தனித்து இயங்கும் வல்லமையைப் பெற்றுவிட்ட புலிகள், சர்வதேச சமூகத்தின் பார்வைக்காகத்தான் பொறுமை காப்பதாகத் தெரிகிறது.
இலங்கை அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தெரியும் சண்டையா, சமாதானமா என்பது! இதில் இந்தியாவின் நிலை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று இரு தரப்புமே நம்புகின்றன.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6.jpg' border='0' alt='user posted image'>
ஈழத்தில் மீண்டும் அமைதி முயற்சியைத் தொடங்கும்விதமாக நார்வேயின் தூதர் எரிக் சோல்ஹேய்ம் மீண்டும் ஈழத்துக்கு வருகிறார். அவர் வந்து திரும்பிய பிறகு, விடுதலைப் புலிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடு வார்கள் என்கிறார்கள்.
அது சுதந்திரத் தமிழீழப் பிரகடன மாகவும் இருக்கலாம்!
<i>நன்றி: ஆனந்தவிகடன்
டி. அருள் எழிலன்
படம்: கே. ராஜசேகரன்</i>
அரித்ரா
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2a.jpg' border='0' alt='user posted image'>
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா!
92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த வழக் கறிஞர் துரைசாமியின் முயற்சியால் சமீபத்தில் நீதிமன்றம் அரித்ராவைத் தமிழகம் அழைத்து வர அனுமதி வழங்கியது. நீண்ட போராட்டத் துக்குப் பிறகு சிறையில் இருக்கும் தன் அம்மா& அப்பாவைச் சந்தித்தார் அரித்ரா!
நளினி
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2.jpg' border='0' alt='user posted image'>
இந்த நெகிழ்ச்சியான கதை ஒரு பக்கமிருக்க, இன்னொரு புறம் ஈழம் சிவக்கிறது மறுபடியும்!
முப்பது ஆண்டு களாகத் தொடரும் ஆயுதப் போராட்டத்தில், இப்போது அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டால், இதுவே இறுதிப் போராக இருக்கும்!
ஈழத்துக் கடற்கரை யில் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாடும் குழந்தைகளின் கால்களில் மீண்டும் சடலங்கள் இடறும் சூழல் கவிகிறது. நான்காண்டு கால அமைதி முடிவுக்கு வந்து, இப்போது மீண்டும் தமிழர்கள் மீதான வன்முறை தொடங்கியிருக்கிறது. மாணவர்கள், இளம் பெண்கள் ராணுவத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார அமைப்புத் திட்டத்தை பேச்சுவார்த்தை காலத்தில் ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, இப்போது பொய் நாடகம் ஆடுகிறது. ஒற்றையாட்சி முறையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இலங்கை அரசாங்கம் ஆதரவை நாடி வந்தால், மீண்டும் ஒரு முறை இந்தியா ஏமாந்துவிடக் கூடாது. இலங்கை அரசுக்கு ராணுவ உதவி இந்தியா செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று நம்புகிறோம்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் & பிரான்ஸில் வாழும் ஈழத்துக் கவிஞர் கி.பி. அரவிந்தன்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p3.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அரசியல் விமர்சகர், ÔÔஈழத் தமிழர்கள் இடைப்பட்ட இந்த நான்கு வருட யுத்த அமைதி காலத்தில் புலிகளுடன் சேர்ந்து தங்களுக்கென அறிவிக்கப்படாத தாய் தேசமான ஈழத்தைக் கிட்டத்தட்டக் கட்டியெழுப்பி விட்டனர்" என்கிறார்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ நடுவப் பணியகம், தமிழீழக் காவல் துறை, தமிழீழ வைப்பகம்(வங்கி), தமிழீழ நீதிமன்றம், தமிழீழச் சுங்கத் துறை, சட்டக் கல்லூரி, கல்வித் துறை என்று துறைவாரியாகப் பிரித்து, சீரான நிர்வாகத்துடன் புலிகளின் ஆட்சி நடக்கிறது. தேசிய மலராக காந்தள் மலரையும், தேசியப் பறவை யாக செண்பகப் பறவையையும், தேசிய விலங்காக சிறுத்தைப் புலியை யும் ஏற்கெனவே அறிவித்த புலிகள், சமீபத்தில் தங்கள் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சட்ட வரைவாக வெளியிட்டு உள்ளனர்.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4a.jpg' border='0' alt='user posted image'>
முல்லைத் தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி என்று ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்தை இயக்குகிறார்கள். விவசாயத்துக்கும் கல்விக்கும் மானியங் களை வழங்கும் அளவு வளர்ந்திருக்கிறார்கள்.
போராளிகள்! முறையான போர்ப் பயிற்சியோடு ஈழம் பற்றிய தத்துவப் படிப்பும் கட்டாயம் படித்தாக வேண்டும். வெறும் ஆயுதப் போராளி களாக மட்டும் இளைஞர்களை வைத்திருக்காமல், அரசியல் விஞ்ஞானத்தையும் புலிகளின் கல்லூரி கற்றுக்கொடுக்கிறது. தமிழீழக் குற்றவியல் சட்டம் இப்போதே நடைமுறையில் இருக்கிறதாம்!
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6a.jpg' border='0' alt='user posted image'>
இது தவிர, கஸ்டம்ஸ் துறையையும் ஏற்படுத்தி, ஈழத்திலிருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வரிகளை வகுத்து அதை வருவாய்ப் பிரிவின் பொறுப்பில் விட்டிருக்கிறார்கள். யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு நாடாக தனித்து இயங்கும் வல்லமையைப் பெற்றுவிட்ட புலிகள், சர்வதேச சமூகத்தின் பார்வைக்காகத்தான் பொறுமை காப்பதாகத் தெரிகிறது.
இலங்கை அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தெரியும் சண்டையா, சமாதானமா என்பது! இதில் இந்தியாவின் நிலை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று இரு தரப்புமே நம்புகின்றன.
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6.jpg' border='0' alt='user posted image'>
ஈழத்தில் மீண்டும் அமைதி முயற்சியைத் தொடங்கும்விதமாக நார்வேயின் தூதர் எரிக் சோல்ஹேய்ம் மீண்டும் ஈழத்துக்கு வருகிறார். அவர் வந்து திரும்பிய பிறகு, விடுதலைப் புலிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடு வார்கள் என்கிறார்கள்.
அது சுதந்திரத் தமிழீழப் பிரகடன மாகவும் இருக்கலாம்!
<i>நன்றி: ஆனந்தவிகடன்
டி. அருள் எழிலன்
படம்: கே. ராஜசேகரன்</i>

