01-20-2006, 09:08 PM
Vasampu Wrote:நன்றி டண்
எனக்காக அக்கறை எடுத்து நீங்கள் எழுதிய பதிலிற்காக. ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நான் எப்போதும் என்னிலையிலிருந்துதான் களத்தில் கருத்துக்களை எழுதி வருகின்றேன். எவரையும் நாடு இனம் மொழி என்று பார்க்காமல் மனிதனாக பார்த்துத்தான் எனது கருத்துக்களை வைக்கின்றேன். எவருக்கும் வக்காலத்தோ அல்லது ஜால்ராவோ போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதேபோல் களத்தில் எப்படியும் பிரைச்சினைகளை உண்டாக்குவதற்காக மற்றைய களங்களின் பிரைச்சினைகளை இங்கே கொண்டு வந்து போடுவதே சிலரின் வேலையாகவுள்ளது. என்னையும் வேறு ஒரு இணையத்தளத்துடன் சம்பந்தப் படுத்த முயற்சித்து தோல்வியடைந்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அப்படியான விடயங்கள் உங்களுக்கு தவறாகப் படவில்லையா?? மேலே குறிப்பிடப்பட்டவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் <b>அவரது நோக்கம் சரியாகப்பட்டதால் </b>அது விடயமாக எனது கருத்தையும் வைத்தேன். இந்தியாவில் லக்கிலுக் போன்ற சிலரின் பொருளாதார நிலையைப் போன்றுதான் எல்லோரும் இருக்கமுடியுமா?? <b>அமெரிக்காவின் உதவியை </b>இந்தியா நிராகரித்தது உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வந்து என்ன செய்யும் என்பதை இந்தியா உணர்ந்துதான். இந்த விடயம் டண்ணுக்கும் புரியாததல்ல. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பல்லாயிரக் கணக்காக நம்மக்கள் உதவும்போது ஒரு தனியொருவர் இந்திய மக்களுக்கு உதவ நினைப்பதை விமர்சிக்க முனைவதுதான் தவறான விடயம். இதனால் அப்படி என்ன பாதிப்பு?? எது செய்தாலும் விமர்சிக்க வேண்டுமென்ற உள்நோக்கமான சிலரின் சிந்தனைகள் மாறுவது தான் எதிர்காலத்தில் எம்மவர்கள் பற்றிய ஏனையவர்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உண்டுபண்ணும்.
அமெரிக்காவின் உதவியை மட்டுமல்ல அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் மறுத்திருந்தது. அவரது நோக்கம் சரி என்கிறீர்களே எப்படி என்று சொன்னால் இன்னும் சிறப்பாய் இருக்கும். இன்னொரு உங்களின் கருத்துப்படி பார்த்தால் நீலன் திருச்செல்வம், கதிர்காமர் அனைவரையும் பாராட்டுவீர்கள் போல் உள்ளதே :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

