01-20-2006, 07:31 PM
<span style='font-size:25pt;line-height:100%'>கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது தாக்குதல்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் </span>
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டன அறிக்கை:
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொள்கிறது. இலங்கை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் வன்முறைகளுக்குப் பின்னால் இருப்பவர் பிரச்சனயை விரும்புகிறார்கள். இது யாரின் பெயரால் தாக்குதல்களை மேற்கொள்கிறோம் என்று கூறுகிறார்களோ அவர்கள் உட்பட அனைத்து இலங்கை சமூகத்தினரையும் பாதிக்கும்.
வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு அனைவரையும் நாம் வேண்டுகிறோம். அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் செயற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
கடந்த சனவரி 13 ஆம் நாள் மட்டக்களப்பு நகரில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழு என்பது ஆயுதமேந்தாத ஒரு அமைப்பு. யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. கண்காணிப்புக் குழுவினரது பணிகளை முழுமையாகச் செயற்படுத்தவும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இருதரப்பினரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
யுத்த நிறுத்த ஒப்பந்த அமலாக்கம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுடன் எதுவித தாமதமும் இன்றி பேச்சுகளை நடத்துமாறு விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டன அறிக்கை:
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொள்கிறது. இலங்கை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் வன்முறைகளுக்குப் பின்னால் இருப்பவர் பிரச்சனயை விரும்புகிறார்கள். இது யாரின் பெயரால் தாக்குதல்களை மேற்கொள்கிறோம் என்று கூறுகிறார்களோ அவர்கள் உட்பட அனைத்து இலங்கை சமூகத்தினரையும் பாதிக்கும்.
வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு அனைவரையும் நாம் வேண்டுகிறோம். அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் செயற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
கடந்த சனவரி 13 ஆம் நாள் மட்டக்களப்பு நகரில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழு என்பது ஆயுதமேந்தாத ஒரு அமைப்பு. யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. கண்காணிப்புக் குழுவினரது பணிகளை முழுமையாகச் செயற்படுத்தவும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இருதரப்பினரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
யுத்த நிறுத்த ஒப்பந்த அமலாக்கம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுடன் எதுவித தாமதமும் இன்றி பேச்சுகளை நடத்துமாறு விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

