01-20-2006, 03:55 PM
kuruvikal Wrote:குறுக்காலபோனவரே.. உங்களுக்கு நிச்சயமா இதுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நீங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஒரு ஆய்வின் அடிப்படை அது தரும் முடிவு.. அதன் பயன்பாடு.. அது மீள் உறுதிப்படுத்தல் ஆய்வு.. அதை நிறுவத்தக்க வேறு ஆய்வுகள் கொண்டு எடுக்கப்படும் இறுதிவரைபு என்று ஆய்வு முடிவுகள் தொடர்பில் பல நிலைகள் இருக்கிறது உங்களுக்கு தெரியும். இங்கு தரப்பட்ட ஆய்வு முடிவின் பிரகாரமே கருத்து வைக்கப்படுகிறது.அதில் நீங்கள் குறை கண்டுபிடிக்க இது வெறும் ஆவண ஆய்வல்ல. இது பரிசோதனை ரீதியான ஆய்வு முடிவு..! அங்கு பல நிலை செயன்முறைகள் தரவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவை வெறும் ஆவண ரீதியான ஆய்வுச் சான்றுகளை வைத்து முறியடிக்க முடியாது. அதேவேளை இவ்வாய்வு முடிவே இறுதியானது என்றும் சொல்லப்படவில்லை. இருப்பினும் இவ்வாய்வு முடிவின் பிரகாரம் ராஜாதிராஜா இட்ட தலைப்பில் தவறில்லை. இதையேதான் சாரமாக 1 முதல் தற்போது வரை சொல்லிட்டு இருக்கிறம். அது புரியல்ல என்பது எமது குற்றமல்ல..! :wink:
குருவியாரே ராஜாதிராஜ இட்டது ஆய்வல்ல விஞ்ஞான சொற்களால் எழுதப்பட்ட ஒரு புனை கதை(psedo science) ,என்பதைத் தான் சொல்லிக் கொண்டு இருகிறோம்,முதலில் இது ஒரு ஆய்வு என்பதை நிருபிக்கவும்.ராஜாதிராஜவே கேட்டுச் சொல்கிறேன் என்ற பின்னர் நீர் இதில் விதண்டவாதம் செய்வது எதனால்?ஓர் ஆய்வென்பது மற்றய துறை சார் அரிஞ்ஞர்களால் (peer review)ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டே ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்பது விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படை.


