01-20-2006, 09:08 AM
<span style='color:darkred'><b>கடற்படையால் படுகொலை செய்யப்பட்டோரின் இறுதி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு </b>
சிறிலங்கா கடற்படையினரால் உப்புவெளிப் பகுதியில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரு பொதுமக்களினது இறுதி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
திருகோணமலையில் வியாழக்கிழமை பிற்பகலில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இந்தச் சம்பவத்தையடுத்து பொதுமக்கள் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் செல்லத்துரை செல்வராஜா (வயது 25), செல்வநாயகபுரம் மற்றும் வில்சன் கிறிஸ்டோபர் ஜோர்ஜ் (வயது 35) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த வில்சன் கிறிஸ்டோபர் ஜோர்ஜ், நித்தியபுரி அல்லெஸ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர். 3 குழந்தைகளின் தந்தையாவார்.
இருவரது உடலையும் பிரேத பரிசோதனை செய்த திருகோணமலை அரச மருத்துவர் காமினி குலதுங்க, துப்பாக்கிச் சூட்டினாலேயே இருவரும் உயிரிழந்தனர் என்று அறிவித்தார். அதேபோல் மரண விசாரணை நடத்திய நீதிபதி இராமகமலனும் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகத் தீர்ப்பளித்தார்.
கொல்லப்பட்ட இருவரது உடல்களும் திருகோணமலை நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் வடபகுதியில் உள்ள உப்புவெளீ அல்லெஸ் தோட்ட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்</span>
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா கடற்படையினரால் உப்புவெளிப் பகுதியில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரு பொதுமக்களினது இறுதி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
திருகோணமலையில் வியாழக்கிழமை பிற்பகலில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இந்தச் சம்பவத்தையடுத்து பொதுமக்கள் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் செல்லத்துரை செல்வராஜா (வயது 25), செல்வநாயகபுரம் மற்றும் வில்சன் கிறிஸ்டோபர் ஜோர்ஜ் (வயது 35) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த வில்சன் கிறிஸ்டோபர் ஜோர்ஜ், நித்தியபுரி அல்லெஸ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர். 3 குழந்தைகளின் தந்தையாவார்.
இருவரது உடலையும் பிரேத பரிசோதனை செய்த திருகோணமலை அரச மருத்துவர் காமினி குலதுங்க, துப்பாக்கிச் சூட்டினாலேயே இருவரும் உயிரிழந்தனர் என்று அறிவித்தார். அதேபோல் மரண விசாரணை நடத்திய நீதிபதி இராமகமலனும் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகத் தீர்ப்பளித்தார்.
கொல்லப்பட்ட இருவரது உடல்களும் திருகோணமலை நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் வடபகுதியில் உள்ள உப்புவெளீ அல்லெஸ் தோட்ட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்</span>
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

