Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம்
#6
<span style='color:green'><b>சொல்ஹெய்ம், பாலசிங்கம் வருகையோடு நல்ல திருப்பம் கிட்டும் என அரசு நம்பிக்கை </b>

சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பது தொடர்பாக நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்க மும் இலங்கை வரவிருக்கின்றமை சமாதான முயற்சியில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்.

சமாதான முயற்சியில் தீவிரமாக இருக் கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவர் களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த் துக் காத்திருக்கின்றார். நல்லதொரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச் சரவைப் பேச்சாளருமான நிமால் சிறிபால டி சில்வா நேற்று கொழும்பில் உள்ள தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

சமாதானப் பேச்சைத் தொடங்குவது தொடர்பான முயற்சியில் ஈடுபடுவதற்காக இம்மாதம் 23ஆம் திகதி நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் அன்ரன் பால சிங்கமும் இலங்கைக்கு வருகைதரவுள்ள னர்.

இவர்களின் வருகையை நாம் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். பேச்சை ஆரம்பிப்பது தொடர்பான நல்ல முடிவு ஒன்று கிடைக்கும் என நாம் ஆவலுடன் நம்புகிறோம். இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியையும் புலிகளின் தலைவர் பிர பாகரனையும் சந்திப்பார். இந்தச் சந்திப்பின் மூலம் சாதகமான முடிவுகளை ஜனாதிபதி எரிக் சொல்ஹெய்முக்குத் தெரிவிக்கவுள் ளார்.

அதேபோல, பிரபாகரனும் நல்ல முடிவை அறிவிப்பார் என நாம் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

எரிக் சொல்ஹெய்மின் வருகையுடன் சமா தானப் பேச்சுக்குத் தடையாகவிருக்கின்ற அந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்பதில் நாம் உறுதியாகவும் நம்பிக்கை யுடனும் இருக்கிறோம்.

அடுத்ததாக வடக்குகிழக்கில் தற் போதுள்ள பதற்றமான சூழலைத் தணித்து வழமை நிலையைத் தோற்றுவிக்கவும் ஜனா திபதி பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.

மட்டக்களப்பில் யுத்தநிறுத்தக் கண்காணிப் புக் குழுவினரின் அலுவலகத்திற்குக் குண் டுத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அவர்கள் தங்களது பணியில் நின்று விலகாது, தொடர்ந் தும் தங்களது பணியைச்செய்து வருகின்ற னர். இதற்காக ஜனாதிபதி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு நன்றிகளைத் தெரிவித் துள்ளார். அத்தோடு, தொடர்ந்தும் அப்பணி யில் ஈடுபடுமாறு அவர் யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினரைக் கேட்டுக் கொண் டுள்ளார்.

ஆகவே, எரிக் சொல்ஹெய்மின் வருகை யுடன் எல்லாம் ஒரு சுமுக நிலைக்கு வந்து, நாட்டில் இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு வகையான பீதி நீங்கும் என்பது நிச்சயம் இவ்வாறு அவர் கூறினார். </span>

<i><b>தகவல் மூலம்- உதயன்/ பதிவு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 06:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:48 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 01:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:21 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:44 AM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 05:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)