01-20-2006, 08:19 AM
<b>பாலசிங்கத்துக்கு இராணுவ உலங்குவானூர்தி அளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய </b>
கிளிநொச்சி வருகை தர உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி அளிக்கக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா, பாலசிங்கத்தின் பயண ஏற்பாட்டுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசாங்கம் அதை பரிசீலிக்கும் என்றார்.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அண்மைய இராணுவத்தினர் மீதான கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என்பதை பகிரங்கமாக பாலசிங்கம் அறிவித்த பின்னர் அந்த இராணுவத்தினர் பாதுகாப்புடன் வன்னிக்கு செல்லட்டும் என்றார் அவர்.
அரசாங்கத்தின் இந்த முடிவை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும் இராணுவப் பாதுகாப்பு தேவையெனில் தாக்குதலுக்கான பகிரங்க ஒப்புதலை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் ஜே.வி.பி.யின் மூத்த தலைவரான அனுராகுமார திசநாயக்க, இதை நாம் எதிர்க்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்
<b><i>தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
கிளிநொச்சி வருகை தர உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி அளிக்கக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா, பாலசிங்கத்தின் பயண ஏற்பாட்டுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசாங்கம் அதை பரிசீலிக்கும் என்றார்.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அண்மைய இராணுவத்தினர் மீதான கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என்பதை பகிரங்கமாக பாலசிங்கம் அறிவித்த பின்னர் அந்த இராணுவத்தினர் பாதுகாப்புடன் வன்னிக்கு செல்லட்டும் என்றார் அவர்.
அரசாங்கத்தின் இந்த முடிவை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும் இராணுவப் பாதுகாப்பு தேவையெனில் தாக்குதலுக்கான பகிரங்க ஒப்புதலை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் ஜே.வி.பி.யின் மூத்த தலைவரான அனுராகுமார திசநாயக்க, இதை நாம் எதிர்க்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்
<b><i>தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
"

