01-20-2006, 05:45 AM
<b>அகதிகள் முகாமில் வாலிபர் வெட்டி கொலை </b>
<img src='http://dinamalar.com/2006jan20/photos/impn43.jpg' border='0' alt='user posted image'>
காலாப்பட்டு: புதுச்சேரி அருகே இலங்கை அகதிகள் முகாமில் அதிகாலையில் கணவன்மனைவி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலில் கணவன் படுகொலை செய்யப்பட்டார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த 250 குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த முகாமில் இலங்கை மன்னார் மாவட்டம் நானாட்டா பகுதியை சேர்ந்த மகன் நேசன் (26) தனது மனைவி கவிதா(25), மகள் பானு (2) ஆகியயோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேசனின் வீட்டு கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டனர். உடன் நேசனின் மனைவி கவிதா தண்ணீர் குவளையுடன் கதவை திறந்தார். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து கவிதாவையும், அவரது கணவர் நேசனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது நேசனின் வீட்டிலிருந்து வெளியே வந்த முகமூடி(மப்ளர்) அணிந்த கொலையாளிகள் கத்தியைக் காட்டி மிரட்டியபடி தப்பி சென்றனர்.
பின்னர் வீட்டினுல் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த நேசன் மற்றும் கவிதாவை பொதுமக்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேசன் இறந்தார். கவிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோ, மரக்காணம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், அரிக்கிருஷ்ணன், ஏட்டு அலெக்ஸ்சாண்டார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ஏஞ்சல் சம்பவ இடத்தில் இருந்து முதலியார்குப்பம், அனிச்சங்குப்பம் வழியே சுமார் 3 கி.மீ., துõரத்திற்கு ஓடி திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் நடந்த கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் பொங்கலுக்கு முன்பு நேசனுக்கும்முகாமில் தங்கியுள்ள வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்</span>
http://dinamalar.com/2006jan20/imp43.asp
<img src='http://dinamalar.com/2006jan20/photos/impn43.jpg' border='0' alt='user posted image'>
காலாப்பட்டு: புதுச்சேரி அருகே இலங்கை அகதிகள் முகாமில் அதிகாலையில் கணவன்மனைவி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலில் கணவன் படுகொலை செய்யப்பட்டார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த 250 குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த முகாமில் இலங்கை மன்னார் மாவட்டம் நானாட்டா பகுதியை சேர்ந்த மகன் நேசன் (26) தனது மனைவி கவிதா(25), மகள் பானு (2) ஆகியயோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேசனின் வீட்டு கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டனர். உடன் நேசனின் மனைவி கவிதா தண்ணீர் குவளையுடன் கதவை திறந்தார். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து கவிதாவையும், அவரது கணவர் நேசனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது நேசனின் வீட்டிலிருந்து வெளியே வந்த முகமூடி(மப்ளர்) அணிந்த கொலையாளிகள் கத்தியைக் காட்டி மிரட்டியபடி தப்பி சென்றனர்.
பின்னர் வீட்டினுல் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த நேசன் மற்றும் கவிதாவை பொதுமக்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேசன் இறந்தார். கவிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோ, மரக்காணம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், அரிக்கிருஷ்ணன், ஏட்டு அலெக்ஸ்சாண்டார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ஏஞ்சல் சம்பவ இடத்தில் இருந்து முதலியார்குப்பம், அனிச்சங்குப்பம் வழியே சுமார் 3 கி.மீ., துõரத்திற்கு ஓடி திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் நடந்த கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் பொங்கலுக்கு முன்பு நேசனுக்கும்முகாமில் தங்கியுள்ள வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்</span>
http://dinamalar.com/2006jan20/imp43.asp
.
.
.

