01-20-2006, 04:29 AM
Selvamuthu Wrote:ரவி தமிழ்வாணன் எனக்கும் நன்கு தெரிந்தவர். இலண்டன், கனடா, ஐரோப்பா, அவஸ்திரேலியா, மத்தியகிழக்கு என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கின்றார். எனது மூன்று படைப்புக்கள் உட்பட புலம் பெயர்ந்த, புலம்பெயராத எழுத்தாளர்களின் படைப்புக்கள் என்று பல படைப்புக்களை எம்மவர்களின் உதவியுடன் வெளியிட்டார். இன்னமும் வெளியிடுவார் என்றே எண்ணுகிறேன்.
லேனா தமிழ்வாணனையும் சென்ற சித்திரை மாதம் இந்தியா சென்றிருந்தபோது மணிமேகலைப் பிரசுரத்தில் சந்தித்து உரையாடினேன்.
அடுத்து,
ஆமாம். ஆசிரியரே,
ரவி தமிழ்வாணன் ஈழத்து ஆக்கங்களை வெளியிடும்போது சிலர் எதிர்ப்புக் குரல் வெளியிட்டும், அவரை அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்து கொண்டனர். இதனால் வீரகேசரிப்பத்திரிகையில் அவர் அதற்கு பதில் மடல் எழுதியதைப் படித்ததாக நினைவு.
எங்கள் மக்களில் சிலருக்கு அந்த வருத்தம் இருக்கின்றது. தாங்களும் ஒய்டும் செய்யமாட்டார்கள். செய்பவர்களையும் மதிக்கமாட்டார்கள்
[size=14] ' '

