01-19-2006, 04:17 PM
[quote=Aaruran][quote]தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..தேவடியாள் என்று இன்றும் கூட ஈழத்தமிழர் சமூகத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பார்வை உண்டு. இல்லை என்கிறீர்களா. அதையே மேலே பரதநாட்டியம் என்ற தலைப்பில் இடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையும் சொல்கிறது. அதையே சுட்டிக்காட்டினோம். அதைவிடுத்து நாங்கள் நடனத்தை இழிவு என்று சொல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். [/quote]
<span style='color:green'><b>குருவி, உங்களின் நோக்கமெல்லாம் பரதநாட்டியத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லையென்பதை \"நிரூபிப்பது\" அதற்கு எத்தனையோ புருடாக்கள் விட்டீர்கள்.</b> இப்ப இதுவுமா? <b> சதிராட்டம், சதிராட்டக்காரியென்று தமிழரிடம் இன்று இல்லை.</b> சதிராட்டம், பரதநாட்டியம் பெயருடன் கண்ணியமாக நடத்தப் படுகிறது.
<b>இன்று பெரும்பான்மையாகப் பரதம் கற்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான்.</b> இந்தியாவில் கூட நிலை மாறிவிட்டது. பரதநாட்டியம் இன்று தமிழரின் கலை, தமிழ் நாட்டின் கலையென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர.
இந்த விடயத்தின் தலைப்பைத் திரித்து விட்டுப் பரதநாட்டியம் தமிழருடையதா, அல்லது பார்ப்பான்களுடையதா என்று மாற்றி உமக்கு ஆதரவைக் கூட்ட நினைத்தீர். உம்மை விட உண்மையறிந்த பார்ப்பான்கள் யாரும், உமக்காகக் களத்தில் இறங்கவில்லை.
<b>இந்தத் தலைப்பின் நோக்கம் பரதத்தின் ஆரம்பமும் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா என்பது தானே தவிர இன்றைய பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது பார்ப்பான்களுடையதா என்பதல்ல, பார்ப்பான என்ற பதத்தைத் திட்டமிட்டு இங்கு முதலில் இழுத்து வந்தததே நீர் தான்</b>.
பரதநாட்டியத்தின் அடிப்படை தமிழரின் சதிர் என்பதை நீரூம், யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் பரதநாட்டியத்தைத் தமிழர் இரவல் வாங்கவில்லை, மற்றவர்கள் இரவல் வான்கினார்கள், அவர்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் அவர்கள் மெருகூட்டினார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
<b>பார்ப்பனிய பரதநாட்டியம் என்ற ஒன்றில்லை,</b> உமக்கு உண்மையாகவே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியுமா, அல்லது பார்த்தாவதிருக்கிறீரா. அல்லது இதுவும் ' அனு' வின் Home Page இலிருந்து எடுத்ததா? <b>கீர்த்தனங்கள், கதைகள், மொழி கூட மாறலாம். ஆனால் அடிப்படையமைப்பு ஒன்று தான், எந்த சதிர் நடனம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் கலாசேத்திரத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டதோ அதே தான் இன்றும் ஆடப் படுகிறது</b>.
நான் சொல்ல வந்ததெல்லாம், சமஸ்கிருதம் கூடுதலாக நுழைந்து விட்டது. அதைத் தமிழாக்க வேண்டுமென்பது தான். <b>கடந்த நூற்றாண்டு வரை எழுத்துத் தமிழில் சமஸ்கிருதப் பாவனை பெருமளவில் இருந்தது, அதன் கருத்து தமிழும் பார்ப்பான்களுடையது என்பதா</b>? எழுத்துத் தமிழிலிருந்து சமஸ்கிருதப் பாவனையை அகற்றுவதில் ஈழத்தமிழறிஞறர்கள் முன்னணியிலிருந்து பெரும் பணியாற்றினார்கள். <b>அதே போல் இன்றும் ஈழத்தமிழர்கள், பரதநாட்டியத்தைல் மலிந்துள்ள சமஸ்கிருதப் பாவனையை மாற்றுவார்கள், மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</b>
[quote]இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்
[size=15]உலகம் இன்று பரதநாட்டியத்தைத் தமிழருடையதல்ல என்று சொல்லவில்லை, இந்திய அரசும் சொல்லவில்லை, தமிழக அரசும் சொல்லவில்லை. இலங்கைத் தமிழரும் சொல்லவில்லை.
<b>நாங்கள், நாங்கள் என்று புருடா விடுவதை நிறுத்துங்கள், நீங்கள், நாங்களல்ல என்று நீங்கள் இந்த இணையத்தளத்தில் பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்ததாகக் கேள்விப் பட்டேன், அதற்குப் பின்பும் என்ன \"நாங்கள்</b>\"?
</span>[/quote]
ஆரூரன் உங்களிடம் ஈழத்தமிழரின் யதார்த்த வாழ்வியல் பற்றிய தெளிவில்லை என்பதை மேல் உள்ள கருத்துக்கள் வகையாகச் சொல்கின்றன. ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை விட சித்திரம் கர்நாடக சங்கீதம் இவற்றையே அதிகம் படிக்கின்றனர். எதற்கும் ஈழத்தில் அழகியற்பாடம் பற்றிய புள்ளி விபரத்தை நோக்கவும். இன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரதநாட்டியம் தமிழர்கள் கலை என்று உணர்ந்து படிக்கப்படுவதிலும் சமூகத்தில் போட்டிக்கு என்ர மகளுக்கும் ஆடத்தெரியும் எனக்கும் அரங்கேற்றம் நடத்தத் தெரியும் என்று காட்ட பரதநாட்டியம் பழக்கப்படுகிறதே அன்றி அது தமிழ்கலை என்று அறிந்து அதன் உண்மையான வடிவத்தில் படிக்கப்படவில்லை. படிக்கப்படுவதெல்லாம் பாரதமுனிக்குச் சொந்தமான பரதக்கலையே. நாங்களும் தான் பல அரங்கேற்றம் பாத்திருக்கின்றோம்..சிவபெருமானைத் துதித்து பாரதமுனிக்கு நன்றி சொல்லி கண்ணனின் லீலைகளை காட்டி ஒரு நடனம் ஆடாமல் எவரும் மேடை விட்டு இறங்குவதில்லை. பரத நாட்டியத்தை விட கும்மி கோலாட்டம் சிலம்பாட்டாம் பொம்மலாட்டம் இவை இன்றும் கூட தமிழர்கள் உருவாக்கிய வகையினிலின்றும் அதிகம் மாறுபாடில்லாது இருப்பினும் அவற்றைத் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் அவை பிரசித்தம் இல்லாததால். பரதநாட்டியத்துக்கு பார்ப்பர்ணியர் கொடுத்த பிரசித்தமே ஈழத்தமிழர்கள் அதன் வால் பிடிக்க முக்கிய காரணம்.
தமிழர்கள் சுயமா சிந்தித்து கலை வளர்க்கிறார்கள் என்பது சுத்தப் பொய். அவர்கள் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்ட கண்ணை மூடிக் கொண்டு சிலதைப் பின்பற்றுகிறார்கள் என்பதே மெய். தமிழும் தெரியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் கீர்த்தனையும் விளங்காமல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெட்டிப்பாம்பாட்டம் ஆடும் பரதநாட்டிய தாரகைகளை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக உருவாக்கி வரும் சீரழிவை பல மூத்த கலைஞர்கள் கண்டு அங்கலாய்த்ததையும் கவனிக்க முடிந்திருக்கிறது. இவர்கள் பரதநாட்டிய மேடைக்கு அழைத்து வரும் அநேக கலைஞர்கள் வட இந்திய அல்லது இந்திய பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும்..பிரபல்யங்களை மேடையில் இருத்தி தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பிரபல்யப்படுத்தும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கலை வளர்க்கிறார்கள் அதுவும் பரதநாட்டியத்தின் தமிழர் வரலாறு தெரிந்து வளர்க்கிறார்கள் என்று சொல்லும் மடமையை எப்படிச் சுட்டெரிப்பது. இந்த இடத்தில் மிஸ்டர் ஆரூரனிடம் சவாலாகவே விடுகிறோம்.. கனடா சரி பிரித்தானியா சரி பிரான்ஸ் சரி எங்கென்றாலும் ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள் உங்கள் கூற்றின் அப்பட்டமான பொய் தெரிய வரும்.
நாங்கள் புருடா விடவில்லை.. தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. பார்ப்பர்ணிய சிந்தனைகள் புகுத்தப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்வோம். அதையே சமூகமும் பின்பற்றுகிறது. முடியும் என்றால் பரதநாட்டியம் தான் சதிர் உங்கள் பிள்ளைகள் ஆடுவது சதிராட்டம் என்று ஒரு விளம்பரத்தைப் போட்டு அதை வாசிக்கவிட்டு ஈழத்தமிழர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் உண்மை புலப்படலாம். அந்தளவுக்கு பரதநாட்டியத்தை அதன் உண்மை வரலாற்றை அறியாமலேயே தமிழர்கள் அதைப் படித்து வருகிறார்கள். இப்போ இவை கூட சில தேவைகள் கருதி எழுந்த கட்டுரைகளே தவிர உண்மையில் ஈழத்தமிழர்கள் கலை வளர்க்கும் ஆர்வத்தில் வடிக்கப்படவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தனித்துவம் செப்ப அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடல் செய்த கலைபண்பாட்டுக்கழகம் இன்னென்னது ஈழத்தமிழர் பாரம்பரியக் கலை வடிவங்கள் என்று கூற இப்போ புலத்தில் படித்துவிட்டு புகழுக்கும் அலையும் ஒரு கூட்டம் பேப்பரையும் பேனாவையும் கணணியையும் வைத்துக்கொண்டு உலகுக்கு புதிய வரலாறு படைப்பதாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறது. தாங்களும் தமிழர் கலைகளின் வேர் அறிவதாக வேசம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலை பண்பாடுக்கழகம் சிலதை தெளிவாக அறிவித்த பிந்தான் இவை நடைபெறுகின்றன என்பதையும் கவனித்தல் நன்று. கலைபண்பாட்டுக்கழகம் பல விடயங்களை ஆய்வுரீதியாக சான்றுகள் சகிதம் சொல்ல முனைகிறது. வெறும் கட்டுரைகளை மையப்படுத்தாமல் அகழ்வாராய்ச்சிகளை மற்றும் பிராந்திய ஆய்வுகளை பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை அவற்றின் நம்பகத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தீர்மானிக்கின்றார்கள்.
ஐயா.ஆரூரன் அவர்களே...எங்கள் டன் இன்னோர் இடத்தில் சொன்ன பின்னர்தான் உங்கள் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. நீங்கள் இருண்ட உலகத்துக்குள் விளக்குப் பிடிக்கப் போய் இப்போ கண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறீர்கள். "என்ன சதிராட்டம் போடுறா"..இச்சொல்லை தற்போதும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் பெற்றோர்கள் உச்சரிப்பதை கண்முன்னாலே கண்டு காதாலும் கேட்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லை என்று சாதிக்க நிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்களா புருடா விட்டுத்திரிகிறீர்கள். ஆய்வுகளின் வகைகளில் கருத்துக்கணிப்பும் ஒன்று. உங்களால் முடிந்தால் ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு பரதநாட்டியத்தின் உண்மை வரலாறு தெரியும் என்று கணிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
சும்மா உங்கள் சமூகத்தைப் பற்றிப் பொய்த்தோற்றம் காட்டாமல்..பரதநாட்டியத்தின் நடைமுறை வடிவம் பற்றி மூடி மறைக்காமல் உண்மைகளை தரிச்சித்து உருப்படியான ஆய்வுகள் மூலம் திரிபான வராலாறுகளை திருத்த வகை செய்யுங்கள். நீங்கள் உங்களுக்குள் திருத்தினால் மட்டும் போதாது (அதையே செய்யக் காணம்) அதன் உலக வடிவமும் திருத்தப்பட வேண்டும். காரணம் இன்று உலகம் ஒரு கிராமமாகி விட்டது. உங்களின் உண்மைக்குப் புறம்பான, சான்றுகளுக்கு அப்பாலான செருகல்கள் தாங்கிய புருடாக்கள் எனியும் உலகில் எடுபடாது..! உலகம் உண்மையை தரிசிக்கவே விரும்புகிறது..! அதுக்கு உண்மையை அடையாளம் காணும் முறைகளும் தெரியும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். [/quote]
<span style='color:green'><b>குருவி, உங்களின் நோக்கமெல்லாம் பரதநாட்டியத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லையென்பதை \"நிரூபிப்பது\" அதற்கு எத்தனையோ புருடாக்கள் விட்டீர்கள்.</b> இப்ப இதுவுமா? <b> சதிராட்டம், சதிராட்டக்காரியென்று தமிழரிடம் இன்று இல்லை.</b> சதிராட்டம், பரதநாட்டியம் பெயருடன் கண்ணியமாக நடத்தப் படுகிறது.
<b>இன்று பெரும்பான்மையாகப் பரதம் கற்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான்.</b> இந்தியாவில் கூட நிலை மாறிவிட்டது. பரதநாட்டியம் இன்று தமிழரின் கலை, தமிழ் நாட்டின் கலையென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர.
இந்த விடயத்தின் தலைப்பைத் திரித்து விட்டுப் பரதநாட்டியம் தமிழருடையதா, அல்லது பார்ப்பான்களுடையதா என்று மாற்றி உமக்கு ஆதரவைக் கூட்ட நினைத்தீர். உம்மை விட உண்மையறிந்த பார்ப்பான்கள் யாரும், உமக்காகக் களத்தில் இறங்கவில்லை.
<b>இந்தத் தலைப்பின் நோக்கம் பரதத்தின் ஆரம்பமும் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா என்பது தானே தவிர இன்றைய பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது பார்ப்பான்களுடையதா என்பதல்ல, பார்ப்பான என்ற பதத்தைத் திட்டமிட்டு இங்கு முதலில் இழுத்து வந்தததே நீர் தான்</b>.
பரதநாட்டியத்தின் அடிப்படை தமிழரின் சதிர் என்பதை நீரூம், யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் பரதநாட்டியத்தைத் தமிழர் இரவல் வாங்கவில்லை, மற்றவர்கள் இரவல் வான்கினார்கள், அவர்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் அவர்கள் மெருகூட்டினார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
<b>பார்ப்பனிய பரதநாட்டியம் என்ற ஒன்றில்லை,</b> உமக்கு உண்மையாகவே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியுமா, அல்லது பார்த்தாவதிருக்கிறீரா. அல்லது இதுவும் ' அனு' வின் Home Page இலிருந்து எடுத்ததா? <b>கீர்த்தனங்கள், கதைகள், மொழி கூட மாறலாம். ஆனால் அடிப்படையமைப்பு ஒன்று தான், எந்த சதிர் நடனம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் கலாசேத்திரத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டதோ அதே தான் இன்றும் ஆடப் படுகிறது</b>.
நான் சொல்ல வந்ததெல்லாம், சமஸ்கிருதம் கூடுதலாக நுழைந்து விட்டது. அதைத் தமிழாக்க வேண்டுமென்பது தான். <b>கடந்த நூற்றாண்டு வரை எழுத்துத் தமிழில் சமஸ்கிருதப் பாவனை பெருமளவில் இருந்தது, அதன் கருத்து தமிழும் பார்ப்பான்களுடையது என்பதா</b>? எழுத்துத் தமிழிலிருந்து சமஸ்கிருதப் பாவனையை அகற்றுவதில் ஈழத்தமிழறிஞறர்கள் முன்னணியிலிருந்து பெரும் பணியாற்றினார்கள். <b>அதே போல் இன்றும் ஈழத்தமிழர்கள், பரதநாட்டியத்தைல் மலிந்துள்ள சமஸ்கிருதப் பாவனையை மாற்றுவார்கள், மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</b>
[quote]இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்
[size=15]உலகம் இன்று பரதநாட்டியத்தைத் தமிழருடையதல்ல என்று சொல்லவில்லை, இந்திய அரசும் சொல்லவில்லை, தமிழக அரசும் சொல்லவில்லை. இலங்கைத் தமிழரும் சொல்லவில்லை.
<b>நாங்கள், நாங்கள் என்று புருடா விடுவதை நிறுத்துங்கள், நீங்கள், நாங்களல்ல என்று நீங்கள் இந்த இணையத்தளத்தில் பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்ததாகக் கேள்விப் பட்டேன், அதற்குப் பின்பும் என்ன \"நாங்கள்</b>\"?
</span>[/quote]
ஆரூரன் உங்களிடம் ஈழத்தமிழரின் யதார்த்த வாழ்வியல் பற்றிய தெளிவில்லை என்பதை மேல் உள்ள கருத்துக்கள் வகையாகச் சொல்கின்றன. ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை விட சித்திரம் கர்நாடக சங்கீதம் இவற்றையே அதிகம் படிக்கின்றனர். எதற்கும் ஈழத்தில் அழகியற்பாடம் பற்றிய புள்ளி விபரத்தை நோக்கவும். இன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரதநாட்டியம் தமிழர்கள் கலை என்று உணர்ந்து படிக்கப்படுவதிலும் சமூகத்தில் போட்டிக்கு என்ர மகளுக்கும் ஆடத்தெரியும் எனக்கும் அரங்கேற்றம் நடத்தத் தெரியும் என்று காட்ட பரதநாட்டியம் பழக்கப்படுகிறதே அன்றி அது தமிழ்கலை என்று அறிந்து அதன் உண்மையான வடிவத்தில் படிக்கப்படவில்லை. படிக்கப்படுவதெல்லாம் பாரதமுனிக்குச் சொந்தமான பரதக்கலையே. நாங்களும் தான் பல அரங்கேற்றம் பாத்திருக்கின்றோம்..சிவபெருமானைத் துதித்து பாரதமுனிக்கு நன்றி சொல்லி கண்ணனின் லீலைகளை காட்டி ஒரு நடனம் ஆடாமல் எவரும் மேடை விட்டு இறங்குவதில்லை. பரத நாட்டியத்தை விட கும்மி கோலாட்டம் சிலம்பாட்டாம் பொம்மலாட்டம் இவை இன்றும் கூட தமிழர்கள் உருவாக்கிய வகையினிலின்றும் அதிகம் மாறுபாடில்லாது இருப்பினும் அவற்றைத் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் அவை பிரசித்தம் இல்லாததால். பரதநாட்டியத்துக்கு பார்ப்பர்ணியர் கொடுத்த பிரசித்தமே ஈழத்தமிழர்கள் அதன் வால் பிடிக்க முக்கிய காரணம்.
தமிழர்கள் சுயமா சிந்தித்து கலை வளர்க்கிறார்கள் என்பது சுத்தப் பொய். அவர்கள் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்ட கண்ணை மூடிக் கொண்டு சிலதைப் பின்பற்றுகிறார்கள் என்பதே மெய். தமிழும் தெரியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் கீர்த்தனையும் விளங்காமல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெட்டிப்பாம்பாட்டம் ஆடும் பரதநாட்டிய தாரகைகளை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக உருவாக்கி வரும் சீரழிவை பல மூத்த கலைஞர்கள் கண்டு அங்கலாய்த்ததையும் கவனிக்க முடிந்திருக்கிறது. இவர்கள் பரதநாட்டிய மேடைக்கு அழைத்து வரும் அநேக கலைஞர்கள் வட இந்திய அல்லது இந்திய பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும்..பிரபல்யங்களை மேடையில் இருத்தி தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பிரபல்யப்படுத்தும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கலை வளர்க்கிறார்கள் அதுவும் பரதநாட்டியத்தின் தமிழர் வரலாறு தெரிந்து வளர்க்கிறார்கள் என்று சொல்லும் மடமையை எப்படிச் சுட்டெரிப்பது. இந்த இடத்தில் மிஸ்டர் ஆரூரனிடம் சவாலாகவே விடுகிறோம்.. கனடா சரி பிரித்தானியா சரி பிரான்ஸ் சரி எங்கென்றாலும் ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள் உங்கள் கூற்றின் அப்பட்டமான பொய் தெரிய வரும்.
நாங்கள் புருடா விடவில்லை.. தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. பார்ப்பர்ணிய சிந்தனைகள் புகுத்தப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்வோம். அதையே சமூகமும் பின்பற்றுகிறது. முடியும் என்றால் பரதநாட்டியம் தான் சதிர் உங்கள் பிள்ளைகள் ஆடுவது சதிராட்டம் என்று ஒரு விளம்பரத்தைப் போட்டு அதை வாசிக்கவிட்டு ஈழத்தமிழர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் உண்மை புலப்படலாம். அந்தளவுக்கு பரதநாட்டியத்தை அதன் உண்மை வரலாற்றை அறியாமலேயே தமிழர்கள் அதைப் படித்து வருகிறார்கள். இப்போ இவை கூட சில தேவைகள் கருதி எழுந்த கட்டுரைகளே தவிர உண்மையில் ஈழத்தமிழர்கள் கலை வளர்க்கும் ஆர்வத்தில் வடிக்கப்படவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தனித்துவம் செப்ப அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடல் செய்த கலைபண்பாட்டுக்கழகம் இன்னென்னது ஈழத்தமிழர் பாரம்பரியக் கலை வடிவங்கள் என்று கூற இப்போ புலத்தில் படித்துவிட்டு புகழுக்கும் அலையும் ஒரு கூட்டம் பேப்பரையும் பேனாவையும் கணணியையும் வைத்துக்கொண்டு உலகுக்கு புதிய வரலாறு படைப்பதாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறது. தாங்களும் தமிழர் கலைகளின் வேர் அறிவதாக வேசம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலை பண்பாடுக்கழகம் சிலதை தெளிவாக அறிவித்த பிந்தான் இவை நடைபெறுகின்றன என்பதையும் கவனித்தல் நன்று. கலைபண்பாட்டுக்கழகம் பல விடயங்களை ஆய்வுரீதியாக சான்றுகள் சகிதம் சொல்ல முனைகிறது. வெறும் கட்டுரைகளை மையப்படுத்தாமல் அகழ்வாராய்ச்சிகளை மற்றும் பிராந்திய ஆய்வுகளை பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை அவற்றின் நம்பகத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தீர்மானிக்கின்றார்கள்.
ஐயா.ஆரூரன் அவர்களே...எங்கள் டன் இன்னோர் இடத்தில் சொன்ன பின்னர்தான் உங்கள் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. நீங்கள் இருண்ட உலகத்துக்குள் விளக்குப் பிடிக்கப் போய் இப்போ கண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறீர்கள். "என்ன சதிராட்டம் போடுறா"..இச்சொல்லை தற்போதும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் பெற்றோர்கள் உச்சரிப்பதை கண்முன்னாலே கண்டு காதாலும் கேட்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லை என்று சாதிக்க நிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்களா புருடா விட்டுத்திரிகிறீர்கள். ஆய்வுகளின் வகைகளில் கருத்துக்கணிப்பும் ஒன்று. உங்களால் முடிந்தால் ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு பரதநாட்டியத்தின் உண்மை வரலாறு தெரியும் என்று கணிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
சும்மா உங்கள் சமூகத்தைப் பற்றிப் பொய்த்தோற்றம் காட்டாமல்..பரதநாட்டியத்தின் நடைமுறை வடிவம் பற்றி மூடி மறைக்காமல் உண்மைகளை தரிச்சித்து உருப்படியான ஆய்வுகள் மூலம் திரிபான வராலாறுகளை திருத்த வகை செய்யுங்கள். நீங்கள் உங்களுக்குள் திருத்தினால் மட்டும் போதாது (அதையே செய்யக் காணம்) அதன் உலக வடிவமும் திருத்தப்பட வேண்டும். காரணம் இன்று உலகம் ஒரு கிராமமாகி விட்டது. உங்களின் உண்மைக்குப் புறம்பான, சான்றுகளுக்கு அப்பாலான செருகல்கள் தாங்கிய புருடாக்கள் எனியும் உலகில் எடுபடாது..! உலகம் உண்மையை தரிசிக்கவே விரும்புகிறது..! அதுக்கு உண்மையை அடையாளம் காணும் முறைகளும் தெரியும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

