01-19-2006, 02:35 PM
<b>மட்டக்களப்பு நகரில் கிளைமோர்த் தாக்குதல்: பொதுமகன் உட்பட 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி- 25 பேர் காயம்!! </b>
மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை மாலை இராணுவ வாகனமொன்று கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் நான்காவது நபர் அவ்வீதி வழியாக சென்றுகொண்டிருந்த பொதுமகன்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 7 பேருடன் அவ்வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த ஐந்து பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - திருணோமலை வீதி தாண்டவன்வெளியில் உள்ள தயா ஸ்டோர் அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் வீதித்தடைகளை ஏற்டுபத்தி வழமையான சோதனை நடவடிக்கைகளுக்கு சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனமே வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக இச்சம்பவம் தொடர்பாக கூறப்படுகிறது.
<i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை மாலை இராணுவ வாகனமொன்று கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் நான்காவது நபர் அவ்வீதி வழியாக சென்றுகொண்டிருந்த பொதுமகன்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 7 பேருடன் அவ்வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த ஐந்து பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - திருணோமலை வீதி தாண்டவன்வெளியில் உள்ள தயா ஸ்டோர் அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் வீதித்தடைகளை ஏற்டுபத்தி வழமையான சோதனை நடவடிக்கைகளுக்கு சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனமே வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக இச்சம்பவம் தொடர்பாக கூறப்படுகிறது.
<i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

