01-19-2006, 01:37 PM
<b>இலங்கைப் பயணத்தில் சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்படும்: எரிக் சொல்ஹெய்ம் நம்பிக்கை </b>
இலங்கை பயணத்தின் போது சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்பட்டால் எமக்கு பாரிய திருப்தியளிக்கும் என்று இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமது இலங்கைப் பயணம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் எரிக் சொல்ஹெய்ம் கூறியதாவது:
இந்த பயணத்தின் போது யுத்த நிறுத்தத்தை நிலைப்படுத்துதல் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது.
தற்போதைய பயணத்தின் போது ஒரு சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்பட்டாலே எமக்கு அது பாரிய திருப்தியளிக்கும்.
யுத்த காலத்தை ஒப்பிடுகையில் இந்தக் கொடூர வன்முறைகள் இப்போது குறைவுதான். யுத்த களத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமைதிப் பேச்சுகளுக்கான முன் நிபந்தனையாக யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் உள்ளது. எப்போது பேச்சுகள் நடைபெறும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
வன்முறைகள் அதிகரித்துச் செல்வது முக்கிய பிரச்சனையாக உள்ளது. படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்துச் செயற்படுவது என்பதுதான் இப்போதைய முக்கியமான ஒன்றாகும் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
இலங்கை பயணத்தின் போது சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்பட்டால் எமக்கு பாரிய திருப்தியளிக்கும் என்று இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமது இலங்கைப் பயணம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் எரிக் சொல்ஹெய்ம் கூறியதாவது:
இந்த பயணத்தின் போது யுத்த நிறுத்தத்தை நிலைப்படுத்துதல் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது.
தற்போதைய பயணத்தின் போது ஒரு சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்பட்டாலே எமக்கு அது பாரிய திருப்தியளிக்கும்.
யுத்த காலத்தை ஒப்பிடுகையில் இந்தக் கொடூர வன்முறைகள் இப்போது குறைவுதான். யுத்த களத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமைதிப் பேச்சுகளுக்கான முன் நிபந்தனையாக யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் உள்ளது. எப்போது பேச்சுகள் நடைபெறும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
வன்முறைகள் அதிகரித்துச் செல்வது முக்கிய பிரச்சனையாக உள்ளது. படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்துச் செயற்படுவது என்பதுதான் இப்போதைய முக்கியமான ஒன்றாகும் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

