01-19-2006, 12:33 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>போராட்டத்தை கைவிடுங்கள் கூட்டமைப்பிடம் மகிந்த கோரிக்கை </b></span>
தமிழ் தேசிய கூட்மைப்பு எம்.பிக்களை அழைத்தது நேற்றுமாலை சுமார் ஒன்றரைமணி நேரம் அவர்களுடன் பேச்சு நடத்திய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அவர்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களிடம் கோரினார். ஆனால் அதனை கைவிடுவதற்கான இணக்கத்தைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை.
நேற்றிரவு 8மணி முதல் இந்தப் பேச்சுக்கள் அலரிமாளிகையில் இடம் பெற்றன.
தமிழ்தேசியக் கூட்மைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநான், சிவாஜிலிங்கம், என்.ரவிராஜ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மைத்ரிபால சிறிசேன ஆகியோர் உடனிருந்தனர். நாடாளுமன்றக் குழப்பத்இதை கைவிட்டு இன்று அவசரகாலச் சட்டநீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தங்களின் பிரச்சனைககளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விலாவாரியாகக் குறிப்பிட்டால், அவை தொடர்பான உரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பார் என இச் சந்திப்பின்போது மகிந்த தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ் தேசிய கூட்மைப்பு உறுப்பினர்கள், தமிழர்; தாயகத்தில் இராணுவத்தினரும் ஏனைய படையினரும் புரியும் அடாவடித்தனங்கள், அட்டகாசங்களை வரிசைப்படுத்தி மகிந்தவிற்கு எடுத்துரைத்தனர். படையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையினால் இரவு ஆறுமணிக்கு பின்னர் யாழ். குடாநாட்டு மக்கள் வீதிக்கு இறங்குவதில்லை. ஆக இராணுவ வாகனங்களும் சிப்பாய்களின் நடமாட்டமுமே வீதியில்; உள்ளன. அவற்றுக்கு மத்தியில் கொலை, கொள்ளை, திருட்டுக்கள் நடாத்துவோர் தமது ஆயுதங்களுடன் தப்பிச்செல்கின்றார்கள் என்றால் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர்.
மன்னாரில் ஒரு குடும்பத்தைக் கொலை செய்து படையினர் எரித்ததால் அந்தக் கிராமத்துக்கே திரும்பிப்போக அந்த மக்கள் அஞ்சுகின்றனர். உங்கள் படைகளின் செயல்களால் மன்னார் மக்கள் அஞ்சி, மீண்டும் தமிழகத்தில் அதிகளகாகத் தஞ்சம் புகத் தொடங்கிவிட்டனர். உங்கள் கடற்படையினரின் தொல்லையால் குடா நாட்டு மீனவர்கள் தமது படகுகள் சகிதம் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்கின்றனர். நேற்று காரை நகரில் அப்பாவி மீனவர்களின் கால், கைகள் எப்படி கடற்படையினரால் அடித்து முறிக்கப்பட்டுள்ளன என்பதை யாழ். மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு கேளுங்கள் -என்று மகிந்தவிடம் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
படையினர் அத்து மீறிய அட்டகாசங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த மண்ணில் அமைதி சாதியமேயில்லை என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் இந்த மோசமானநிலையை சர்வதேச சமூகத்துக்கும் உங்கள் கவனத்துக்கும் கொண்டு வருவதற்காகவே நாடாளுமன்றை இயங்கவிடாமல் நாம் முடக்கம் செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம். அது பற்றிய முடிவை எமது நாளுமன்றக் குழுவே எடுத்து எனவே அதைக் கைவிடு வதனாலும் அதே நாடாளுமன்றக் குழுவே முடிவெடுக்கவேண்டும்.
ஆகையால் நாம் இப்போது தங்களுக்கு உறுதியான பதில் ஏதும் தரமுடியாது. ஆனால் எமது இந்த முறைப்பாட்டை உரிய முறையில் கவனத்தில் கொண்டு அரச படைகளைக் கட்டுப்படுத்துங்கள் அதை நீங்கள் செயலில் காட்டுவீர்களேயானால் நாடாளுமன்றத்தை முடக்கம் செய்யும் எமது போராட்டத்தைக் கைவிடுவது குறித்து நாம் சாதமாகப் பரீசிலிக்கலாம் என்றும் கூட்டமைப்பினர் மகிந்தவிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.
எனத் தெரியவருகிறது யாழ்குடாநாட்டிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் இருக்கும் குடியிருப்புப் பிரதேசங்கள் எல்லாம் நீங்கள் படைகளைப் பரப்பியுள்ளீர்கள். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேவர அஞ்சுகின்றனர். முதலில் அவர்களை முகாமுக்குள் கொண்டு செல்ல உத்தரவிடுங்கள் என்றும் கூட்டமைப்பினர் கேட்டனர். அதற்கு படையினரை முகாம்களுக்குள் கொண்டு சென்றால் கிரனேட் தாக்குத்கள் குறையுமா என்ற பதில் கேள்வி ஒன்றை மகிந்த எழுப்பினாராம். படையினரைப் பரப்பி வைத்திருந்தால் மட்டும் கிரனேட் தாக்குதல் குறைந்தது விடுமா என்று அதற்குப் பதிலடியாகக் கேள்வி கேட்டனர் தமிழ்க் கூட்டமைப்பினர் 'அப்படித்தான் இராணுவம் நினைக்கின்றது" என மகிந்த பதிலளித்துள்ளார். மக்களோடு பழகத் தெரியாத பேசத் தெரியாத நல்லுறவைப் பேண முடியாத இராணுவத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை அரசினால் வெல்ல முடியாது என்பதை மகிந்தவின் கோரிக்கை குறித்துத் தாங்கள் கூடி ஆராய்வார்கள் என்று பதிலளித்து விட்டு அலரிமாளிகையிலிருந்து புறப்பட்டனர் கூட்டமைப்பினர்
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
தமிழ் தேசிய கூட்மைப்பு எம்.பிக்களை அழைத்தது நேற்றுமாலை சுமார் ஒன்றரைமணி நேரம் அவர்களுடன் பேச்சு நடத்திய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அவர்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களிடம் கோரினார். ஆனால் அதனை கைவிடுவதற்கான இணக்கத்தைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை.
நேற்றிரவு 8மணி முதல் இந்தப் பேச்சுக்கள் அலரிமாளிகையில் இடம் பெற்றன.
தமிழ்தேசியக் கூட்மைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநான், சிவாஜிலிங்கம், என்.ரவிராஜ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மைத்ரிபால சிறிசேன ஆகியோர் உடனிருந்தனர். நாடாளுமன்றக் குழப்பத்இதை கைவிட்டு இன்று அவசரகாலச் சட்டநீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தங்களின் பிரச்சனைககளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விலாவாரியாகக் குறிப்பிட்டால், அவை தொடர்பான உரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பார் என இச் சந்திப்பின்போது மகிந்த தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ் தேசிய கூட்மைப்பு உறுப்பினர்கள், தமிழர்; தாயகத்தில் இராணுவத்தினரும் ஏனைய படையினரும் புரியும் அடாவடித்தனங்கள், அட்டகாசங்களை வரிசைப்படுத்தி மகிந்தவிற்கு எடுத்துரைத்தனர். படையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையினால் இரவு ஆறுமணிக்கு பின்னர் யாழ். குடாநாட்டு மக்கள் வீதிக்கு இறங்குவதில்லை. ஆக இராணுவ வாகனங்களும் சிப்பாய்களின் நடமாட்டமுமே வீதியில்; உள்ளன. அவற்றுக்கு மத்தியில் கொலை, கொள்ளை, திருட்டுக்கள் நடாத்துவோர் தமது ஆயுதங்களுடன் தப்பிச்செல்கின்றார்கள் என்றால் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர்.
மன்னாரில் ஒரு குடும்பத்தைக் கொலை செய்து படையினர் எரித்ததால் அந்தக் கிராமத்துக்கே திரும்பிப்போக அந்த மக்கள் அஞ்சுகின்றனர். உங்கள் படைகளின் செயல்களால் மன்னார் மக்கள் அஞ்சி, மீண்டும் தமிழகத்தில் அதிகளகாகத் தஞ்சம் புகத் தொடங்கிவிட்டனர். உங்கள் கடற்படையினரின் தொல்லையால் குடா நாட்டு மீனவர்கள் தமது படகுகள் சகிதம் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்கின்றனர். நேற்று காரை நகரில் அப்பாவி மீனவர்களின் கால், கைகள் எப்படி கடற்படையினரால் அடித்து முறிக்கப்பட்டுள்ளன என்பதை யாழ். மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு கேளுங்கள் -என்று மகிந்தவிடம் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
படையினர் அத்து மீறிய அட்டகாசங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த மண்ணில் அமைதி சாதியமேயில்லை என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் இந்த மோசமானநிலையை சர்வதேச சமூகத்துக்கும் உங்கள் கவனத்துக்கும் கொண்டு வருவதற்காகவே நாடாளுமன்றை இயங்கவிடாமல் நாம் முடக்கம் செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம். அது பற்றிய முடிவை எமது நாளுமன்றக் குழுவே எடுத்து எனவே அதைக் கைவிடு வதனாலும் அதே நாடாளுமன்றக் குழுவே முடிவெடுக்கவேண்டும்.
ஆகையால் நாம் இப்போது தங்களுக்கு உறுதியான பதில் ஏதும் தரமுடியாது. ஆனால் எமது இந்த முறைப்பாட்டை உரிய முறையில் கவனத்தில் கொண்டு அரச படைகளைக் கட்டுப்படுத்துங்கள் அதை நீங்கள் செயலில் காட்டுவீர்களேயானால் நாடாளுமன்றத்தை முடக்கம் செய்யும் எமது போராட்டத்தைக் கைவிடுவது குறித்து நாம் சாதமாகப் பரீசிலிக்கலாம் என்றும் கூட்டமைப்பினர் மகிந்தவிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.
எனத் தெரியவருகிறது யாழ்குடாநாட்டிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் இருக்கும் குடியிருப்புப் பிரதேசங்கள் எல்லாம் நீங்கள் படைகளைப் பரப்பியுள்ளீர்கள். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேவர அஞ்சுகின்றனர். முதலில் அவர்களை முகாமுக்குள் கொண்டு செல்ல உத்தரவிடுங்கள் என்றும் கூட்டமைப்பினர் கேட்டனர். அதற்கு படையினரை முகாம்களுக்குள் கொண்டு சென்றால் கிரனேட் தாக்குத்கள் குறையுமா என்ற பதில் கேள்வி ஒன்றை மகிந்த எழுப்பினாராம். படையினரைப் பரப்பி வைத்திருந்தால் மட்டும் கிரனேட் தாக்குதல் குறைந்தது விடுமா என்று அதற்குப் பதிலடியாகக் கேள்வி கேட்டனர் தமிழ்க் கூட்டமைப்பினர் 'அப்படித்தான் இராணுவம் நினைக்கின்றது" என மகிந்த பதிலளித்துள்ளார். மக்களோடு பழகத் தெரியாத பேசத் தெரியாத நல்லுறவைப் பேண முடியாத இராணுவத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை அரசினால் வெல்ல முடியாது என்பதை மகிந்தவின் கோரிக்கை குறித்துத் தாங்கள் கூடி ஆராய்வார்கள் என்று பதிலளித்து விட்டு அலரிமாளிகையிலிருந்து புறப்பட்டனர் கூட்டமைப்பினர்
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

