01-19-2006, 04:33 AM
<b>கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் </b>
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் எனக் கோரும் கடிதம் ஒன்றினை திருக்கோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையினர் அனுப்பியுள்ளனர். இது பற்றி 18ம் திகதி அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். இதன் பிரதி யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
திருக்கோணமலை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா இனவாத இராணுவத்தாலும் பெரும்பான்மையின வன்முறையாளர்களாலும் மிகம் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசினதும் அரச படைகளதும் பயங்கரவாத செயல்களுக்கு நீதித்துறையூடாக கூட நிவாரணம் பெற முடியாது தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இழந்தவர்கள்.
சமாதான காலத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பின்பு கண்காணிப்புக் குழு தனது பணியை ஆரமபித்த பின்னே தமிழ் மக்கள ஓரளவு நிம்மதி மூச்சு விட முடிந்தது. திருக்கோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான கண்காணிப்புக் குழு தலைவரதும் அவரது குழுவினரதும் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாகவே மக்கள் இரவில் நித்திரை கொள்ள முடிகிறது. சமாதான ஒப்பந்தத்தை கண்காணிக்கவே கண்காணிப்ப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அவசரகால விதிகளின் கீழ் சமாதான ஒப்பந்தத்தை இல்லாதொழித்து விட்டு அரச படைகளும் ஆயுத கும்பலும் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை தொடுத்துள்ள நிலையில் எங்களுக்குரிய ஒரே ஒரு பாதுகாப்பு அரண் நீங்கள் மட்டுமே. இந்நிலையில் தங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உரிய காரணங்களை நாங்கள் தெளிவாக அறிவோம். ஏத்தனையோ இடர்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் எமக்காக தாங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை ஒவ்வொரு தமிழ் மக்களும் மறக்க மாட்டோம்.
எனவே இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பணி மிகவும் அவசியமானதாகும். தாங்கள் இப்பணியில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வது என்ற முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து சமாதான ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்துவதனை உறுதி செய்தால் மட்டுமே தமிழ் மக்கள் திருக்கோணமலையில் நிம்மதியாக வாழ முடியும். தங்களுக்கும் தங்கள் சேவைக்கும் தமிழ் மக்கள சார்பிலான சகல ஒத்துழைப்பையும் எப்போதும் தருவதற்கு தயாராக உள்ளோம் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் எனக் கோரும் கடிதம் ஒன்றினை திருக்கோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையினர் அனுப்பியுள்ளனர். இது பற்றி 18ம் திகதி அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். இதன் பிரதி யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
திருக்கோணமலை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா இனவாத இராணுவத்தாலும் பெரும்பான்மையின வன்முறையாளர்களாலும் மிகம் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசினதும் அரச படைகளதும் பயங்கரவாத செயல்களுக்கு நீதித்துறையூடாக கூட நிவாரணம் பெற முடியாது தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இழந்தவர்கள்.
சமாதான காலத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பின்பு கண்காணிப்புக் குழு தனது பணியை ஆரமபித்த பின்னே தமிழ் மக்கள ஓரளவு நிம்மதி மூச்சு விட முடிந்தது. திருக்கோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான கண்காணிப்புக் குழு தலைவரதும் அவரது குழுவினரதும் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாகவே மக்கள் இரவில் நித்திரை கொள்ள முடிகிறது. சமாதான ஒப்பந்தத்தை கண்காணிக்கவே கண்காணிப்ப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அவசரகால விதிகளின் கீழ் சமாதான ஒப்பந்தத்தை இல்லாதொழித்து விட்டு அரச படைகளும் ஆயுத கும்பலும் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை தொடுத்துள்ள நிலையில் எங்களுக்குரிய ஒரே ஒரு பாதுகாப்பு அரண் நீங்கள் மட்டுமே. இந்நிலையில் தங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உரிய காரணங்களை நாங்கள் தெளிவாக அறிவோம். ஏத்தனையோ இடர்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் எமக்காக தாங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை ஒவ்வொரு தமிழ் மக்களும் மறக்க மாட்டோம்.
எனவே இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பணி மிகவும் அவசியமானதாகும். தாங்கள் இப்பணியில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வது என்ற முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து சமாதான ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்துவதனை உறுதி செய்தால் மட்டுமே தமிழ் மக்கள் திருக்கோணமலையில் நிம்மதியாக வாழ முடியும். தங்களுக்கும் தங்கள் சேவைக்கும் தமிழ் மக்கள சார்பிலான சகல ஒத்துழைப்பையும் எப்போதும் தருவதற்கு தயாராக உள்ளோம் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
"

