01-18-2006, 03:05 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழ்க்கூட்டமைப்புடன் நேற்றிரவு மகிந்த அவசர சந்திப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை இரவு அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு இரவு 8.30 மணி தொடக்கம் 10 மணிவரை நடைபெற்றது.
<i>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வருகின்ற எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவே கலந்துரையாடல் நடைபெற்றதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பு நாளேடொன்றுக்கு தெரிவித்தார்.</i>
இச்சந்திப்பு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் ஆயுதக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கும் தீர்வு காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாக அரச தலைவர் உறுதியளித்தார்.
முக்கியமாக யாழில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரரராஜசிங்கத்தின் படுகொலை, திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை உட்பட அனைத்து படுகொலைகளையும் விசாரித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அரச தலைவர் உறுதியளித்ததாக இரா. சம்பந்தன் எம்.பி. கூறினார். ஆனால் போராட்டத்தை கைவிடுவதாக அரச தலைவருக்கு தாங்கள் உறுதியளிக்கவில்லையெனவும் தங்கள் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனவும் அரச தலைவரிடம் கூறியதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்ந்திரன், செ.கஜேந்திரன், நடராஜா ரவிராஜ், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் அரச தலைவருடன் அமைச்ர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்</span>
[b]<i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை இரவு அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு இரவு 8.30 மணி தொடக்கம் 10 மணிவரை நடைபெற்றது.
<i>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வருகின்ற எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவே கலந்துரையாடல் நடைபெற்றதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பு நாளேடொன்றுக்கு தெரிவித்தார்.</i>
இச்சந்திப்பு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் ஆயுதக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கும் தீர்வு காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாக அரச தலைவர் உறுதியளித்தார்.
முக்கியமாக யாழில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரரராஜசிங்கத்தின் படுகொலை, திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை உட்பட அனைத்து படுகொலைகளையும் விசாரித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அரச தலைவர் உறுதியளித்ததாக இரா. சம்பந்தன் எம்.பி. கூறினார். ஆனால் போராட்டத்தை கைவிடுவதாக அரச தலைவருக்கு தாங்கள் உறுதியளிக்கவில்லையெனவும் தங்கள் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனவும் அரச தலைவரிடம் கூறியதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்ந்திரன், செ.கஜேந்திரன், நடராஜா ரவிராஜ், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் அரச தலைவருடன் அமைச்ர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்</span>
[b]<i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
"

