01-18-2006, 02:57 PM
<b>திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளிதனர்.</b>
திருகோணமலையில்; ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளித்துள்ளனர். அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட சஜீந்தரனின் தந்தை சண்முகராஜா சாட்சியம் அளிக்கையில்சம்பவ இடத்தில் இருந்த அரச படையினருக்கு தனது மகனின் மரணம் குறித்து தெரியும் எனவும், தனது மகன் துப்பாக்கிச் சூட்டினால்தான் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது மகனுக்கு அரசியலில் எதுவித தொடர்பும் இல்லை எதிரியும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் கட்டுமானப் பொறியியல் படிப்புக்கு தேர்வாகியிருந்தார் தன் மகன் சாலி கிராமத்தில் கணணி கற்பிக்கும் ஆசியராக இடைக்காலத்தில் பணியாற்றி வந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
றொகன்த் என்ற மாணவரின் தாயார் லோகிதாசன் லோகநாயகி சாட்சியம் அளிக்கையில்சம்பவத்தில் தன் மூத்த மகன் கொல்லப்பட்ட சம்பவ இடத்திலிருந்த இராணுவத்தினருக்குகே தன் மகன் எப்படி இறந்தான் என்பது தெரியும் எனவும் தன் மகன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான் என்பதை மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்துகொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
திருகோணமலையில்; ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளித்துள்ளனர். அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட சஜீந்தரனின் தந்தை சண்முகராஜா சாட்சியம் அளிக்கையில்சம்பவ இடத்தில் இருந்த அரச படையினருக்கு தனது மகனின் மரணம் குறித்து தெரியும் எனவும், தனது மகன் துப்பாக்கிச் சூட்டினால்தான் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது மகனுக்கு அரசியலில் எதுவித தொடர்பும் இல்லை எதிரியும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் கட்டுமானப் பொறியியல் படிப்புக்கு தேர்வாகியிருந்தார் தன் மகன் சாலி கிராமத்தில் கணணி கற்பிக்கும் ஆசியராக இடைக்காலத்தில் பணியாற்றி வந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
றொகன்த் என்ற மாணவரின் தாயார் லோகிதாசன் லோகநாயகி சாட்சியம் அளிக்கையில்சம்பவத்தில் தன் மூத்த மகன் கொல்லப்பட்ட சம்பவ இடத்திலிருந்த இராணுவத்தினருக்குகே தன் மகன் எப்படி இறந்தான் என்பது தெரியும் எனவும் தன் மகன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான் என்பதை மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்துகொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
"

