01-18-2006, 02:53 PM
<b>அக்கரைப்பற்றில் பதட்ட நிலை- ஆலையடிவேம்பில் சடலம் மீட்பு! தமிழ் மக்கள் அச்சம் காரணமாக வெளியேற்றம் </b>
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அக்கரைப்பற்றில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மேசன் தொழிலாளர்களின் படுகொலையைக் கண்டித்தே இக்கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்தினைத் தடைசெய்ததால் அக்கரைப்பற்று - அம்பாறை, அக்கரைப்பற்று - பொத்துவில் போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டதுடன், வங்கிகள், அரச நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டதுடன் நகரம் வெறிச் சோடிக் காணப்பட்டது.
இதேவேளை அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அகமது லெப்பை அப்துல் வாஹித் (35) என்பவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது. அப்துல் வாஹித்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாகூர் தம்பி ஆதம்லெப்பை (25), தாக்குதலிருந்து தப்பி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்களை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் தமிழ்ப் பிரதேசமான ஆலையடி வேம்பிலுள்ள வயல் வெளியில் கண்டெடுக்கபடப்பட்டுள்ளது.
இதனையடுத்;து தமிழ் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதையடுத்து முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற சில தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் புறங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் நேற்று பிற்பகலுடன் மூடப்பட்டுள்ளன.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அக்கரைப்பற்றில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மேசன் தொழிலாளர்களின் படுகொலையைக் கண்டித்தே இக்கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்தினைத் தடைசெய்ததால் அக்கரைப்பற்று - அம்பாறை, அக்கரைப்பற்று - பொத்துவில் போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டதுடன், வங்கிகள், அரச நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டதுடன் நகரம் வெறிச் சோடிக் காணப்பட்டது.
இதேவேளை அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அகமது லெப்பை அப்துல் வாஹித் (35) என்பவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது. அப்துல் வாஹித்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாகூர் தம்பி ஆதம்லெப்பை (25), தாக்குதலிருந்து தப்பி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்களை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் தமிழ்ப் பிரதேசமான ஆலையடி வேம்பிலுள்ள வயல் வெளியில் கண்டெடுக்கபடப்பட்டுள்ளது.
இதனையடுத்;து தமிழ் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதையடுத்து முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற சில தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் புறங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் நேற்று பிற்பகலுடன் மூடப்பட்டுள்ளன.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
"

