Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீத
#5
<b>கண்காணிப்புக் குழு அலுவலகம் மீதான தாக்குதலுக்கு நோர்டிக் நாடுகள் கண்டனம் </b>

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீதான தாக்குதலுக்கு நோர்டிக் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


இது தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சு ஓஸ்லோவில் 17 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை மட்டக்களப்பு போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கடந்த 13 ஆம் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பாரபட்சமற்ற, பொதுமக்கள் சார் அமைப்பு. இருதரப்பினராலும் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருதரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் முழு ஒத்துழைப்பும் எமது கண்காணிப்புக் குழுவினருக்கு இருந்து வருகிறது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உறுதிமொழிகளுக்கமைய கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கண்காணிப்புக் குழுவினர் தமது கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இருதரப்பினரிடமும் நாம் எதிர்பார்ப்பதாகும்.

மட்டக்களப்பு கண்காணிப்புக் குழு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. எவருக்கும் காயமேற்படவில்லை என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by puthiravan - 01-14-2006, 04:21 AM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 12:07 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:34 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:42 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)