01-18-2006, 11:32 AM
தூயவன் Wrote:kuruvikal Wrote:தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் குருவிகள்.
உங்கள் வாதத்தை பார்க்காமல் விடவில்லை.
எனக்குத் தோன்றும் சிறிய கேள்வி!
தொடக்கத்தில் <b>இது தேவதாசிகளின் நாட்டியம் இந்த இழி நடனத்தை தமிழர் ஏற்ற வேண்டுமா என்று கேட்கின்றீர்கள்.</b>
பின் சொல்லுகின்றீர்கள். இதை பாப்பாணர் தான் காப்பாற்றினார்கள். எனவே தமிழருக்கு சொந்தமில்லை என்று.
இவ்விரண்டின் மூலம் நாம் பட்டறிவது என்னவென்றால், தமிழருக்கு இதை சொந்தமாக காட்டவிடக்கூடாது என்ற எண்ணம் தானே உங்களிடம் இருந்து பிரதிபலிக்கின்றது.
(இதற்கு ஆதாரம் காட்டியாக வேண்டும் என்று நினைக்கவில்லை. எழுதிய உங்களுக்குத் தெரியும். அப்படி வேண்டும் என்றால் அதை காட்டத் தயார்)
தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..தேவடியாள் என்று இன்றும் கூட ஈழத்தமிழர் சமூகத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பார்வை உண்டு. இல்லை என்கிறீர்களா. அதையே மேலே பரதநாட்டியம் என்ற தலைப்பில் இடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையும் சொல்கிறது. அதையே சுட்டிக்காட்டினோம். அதைவிடுத்து நாங்கள் நடனத்தை இழிவு என்று சொல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

