01-17-2006, 07:59 PM
<b>அரச பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரையில் போராட்டம் தொடரும்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு
[b]தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் அரச பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எமது எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என்று இலங்கையின் அனைத்துத் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.</b>
சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்று முடக்கிய பின்னர் கொழும்பு ஊடகவியலாளர்களை அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை வகித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் ஆர். யோகராஜன், முன்னாள் அமைச்சர் முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்ன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பெ. சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
ஊடகவியலாளர்களிடம் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:
வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரச படைகளின் வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 1 முதல் சனவரி 12ஆம் நாள் வரை அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்களினால் யாழ்ப்பாணத்தில் மட்டும் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களில் மொத்தம் 42 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டு வரும் இந்த அரச பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எமது போராட்டம் தொடரும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை காரணம் ஏதுமின்றி கைது செய்து துன்புறுத்துகிறது சிறிலங்கா இராணுவம். தமிழ் மக்கிளின் பல கடத்தல்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் துணையுடன் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது.
கொழும்பிலும் இதர தென்னிலங்கைப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் அப்பாவி தமிழ் மக்கள் பெருந்தொகையில் கைது செய்யப்பட்டு காவல்நிலையங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகிற அவலம் நீடிக்கிறது.
தமிழ் மக்களின் மீதான இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரச தலைவரும் அவரது அரசாங்கமும் தவறிவிவிட்டன. தனது அரசியல் பிழைப்புக்காக தமிழர்களுக்கு எதிரான ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் ஒரு அரச தலைவரிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.
அமைதி முயற்சிகள் முடங்கிப் போய் நிற்கின்றன. சிறிலங்கா இராணுவத்தினது இந்த வன்முறைகளால் அமைதி முயற்சிகளின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டோம் என்றனர் அவர்கள்.
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
[b]தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் அரச பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எமது எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என்று இலங்கையின் அனைத்துத் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.</b>
சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்று முடக்கிய பின்னர் கொழும்பு ஊடகவியலாளர்களை அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை வகித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் ஆர். யோகராஜன், முன்னாள் அமைச்சர் முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்ன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பெ. சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
ஊடகவியலாளர்களிடம் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:
வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரச படைகளின் வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 1 முதல் சனவரி 12ஆம் நாள் வரை அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்களினால் யாழ்ப்பாணத்தில் மட்டும் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களில் மொத்தம் 42 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டு வரும் இந்த அரச பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எமது போராட்டம் தொடரும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை காரணம் ஏதுமின்றி கைது செய்து துன்புறுத்துகிறது சிறிலங்கா இராணுவம். தமிழ் மக்கிளின் பல கடத்தல்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் துணையுடன் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது.
கொழும்பிலும் இதர தென்னிலங்கைப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் அப்பாவி தமிழ் மக்கள் பெருந்தொகையில் கைது செய்யப்பட்டு காவல்நிலையங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகிற அவலம் நீடிக்கிறது.
தமிழ் மக்களின் மீதான இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரச தலைவரும் அவரது அரசாங்கமும் தவறிவிவிட்டன. தனது அரசியல் பிழைப்புக்காக தமிழர்களுக்கு எதிரான ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் ஒரு அரச தலைவரிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.
அமைதி முயற்சிகள் முடங்கிப் போய் நிற்கின்றன. சிறிலங்கா இராணுவத்தினது இந்த வன்முறைகளால் அமைதி முயற்சிகளின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டோம் என்றனர் அவர்கள்.
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
"

