01-17-2006, 06:54 PM
<b>தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக் காரணமாக நாளை காலை வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு. </b>
இன்று சிறீலங்கா பாராளுமன்றம் கூடிய போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சபை மத்தியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்றம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து 10 நிமிடங்கள் ஒத்திவைத்த சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றைக் கூட்டி கலந்துரையாடினார்.
மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரவே பாராளுமன்றம் நாளை காலை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்து நாளை காலை வரை பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
இன்று சிறீலங்கா பாராளுமன்றம் கூடிய போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சபை மத்தியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்றம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து 10 நிமிடங்கள் ஒத்திவைத்த சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றைக் கூட்டி கலந்துரையாடினார்.
மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரவே பாராளுமன்றம் நாளை காலை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்து நாளை காலை வரை பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
"

